ஆப்நகரம்

Zoo உண்டு ஆனா விலங்கு இல்லை, அருவி இருக்கு ஆனா அனுமதி இல்ல.. வேலூர் சோகம்

விலங்குகளே இல்லாத zoo வை நடத்தி சுற்றலா பயணிகளை ஏமாற்ற வேண்டாம் அமிர்தி சுற்றுலா பயணிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Samayam Tamil 23 Dec 2022, 1:43 pm
வேலூர் மாவட்ட மக்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு சுற்றுலா தளம் அமிர்தி வன உயிரின பூங்காவாகும். ஜவ்வாது மலை அடிவாரத்தில் உள்ள இயற்க்கை எழில் கொஞ்சும் இந்த இடம் வேலூரில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் மூலிகை மனத்தோடு அமைந்து உள்ளது. யானை, புலி உள்ளிட்ட பல்வேறு மிருகங்கள் இங்கு இருப்பதாகவும், இதற்கு கிரிடமாக "கொட்டாறு" - என்ற அருவி இங்கு இருப்பதாக நம்பி வரும் சுற்றலா பயணிகளுக்கு இங்கு பெருத்த ஏமாற்றமே காத்து உள்ளது.
Samayam Tamil vellore


பல்வேறு காரணங்களால் பல மிருகங்கள் இங்கு இல்லாமல், அவை அடைத்து வைக்கப்பட்டு இருந்த கூண்டுகள் மட்டுமே வெறுமென காட்சி அளிக்கின்றது. சில மான்கள் ஒரு மலைபாம்பு, ஒரு நல்லபாம்பு மற்றும் சிலவகை பறவைகள் மட்டுமே இங்கு காட்சி அளிக்கின்றது.

மிகுந்த எதிர்ப்பார்ப்போடு கட்டணம் செலுத்தி Zoo- விற்க்கு வரும் சுற்றுலாவினர் உயிரினங்கள் இல்லாத காரணத்தினால் மிகுந்த ஏமாற்றம் அடைந்து, மனதை தேற்றிக்கொண்டு இங்கு உள்ள அருவிக்கு செல்லலாம் என்று நினைக்கும் பொழுது அங்கும் செல்ல கடந்த 3 ஆண்டுகளாக தடை விதிக்கபட்டு உள்ளது என்ற செய்தியை கேட்டு பயணிகள் விரக்தியின் எல்லைக்கே செல்கின்றினர்.

விலங்குகளை ரசிக்க வந்தவர்கள் அது இல்லாததாலும் கொட்டாறு நீர்வீழ்ச்சியை பார்க்க முடியாமலும் அமிர்தி வனஉயிரின வரவேற்ப்பு பேனரில் தான் விலங்குகளையும் நீர்வீழ்ச்சியையும் புகைப்படமாக பார்த்து செல்கின்றனர். ஆகவே வரவேற்பு பேனர், புகைப்படம் மற்றும் சுவரில் வரையப்பட்டுள்ள அனைத்து மிருகங்களையும் உடனடியாக பார்வைக்கு வைத்து பாதுகாப்புடன் அருவிக்கு செல்லவும், குளிக்கவும், அரசு வசதி செய்து கொடுத்து பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைவதை நிருத்த சுற்றலாவினர் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் சில வருடங்களுக்கு முன்பு சுமார் 5.5 கோடி மதிப்பீட்டில் தீட்டப்பட்ட படகுதுறை திட்டத்தையும் அமுல்படுத்திடவும் கோரிக்கை வைக்கின்றனர். சுற்றுலா பயணிகளுக்கு உண்மையில் சோகம்தான்...

அடுத்த செய்தி