ஆப்நகரம்

திருப்பத்தூர் அருகே கோர விபத்து… 2 பச்ச குழந்தைகளின் நிலை என்ன?

திருப்பத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது டிராவல்ஸ் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Samayam Tamil 19 Jan 2022, 8:36 am

ஹைலைட்ஸ்:

  • திருப்பத்தூர் விஷமங்கலம் அருகே சாலை விபத்து
  • தந்தை மரணம், இரண்டு குழந்தைகளுக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Tirupattur accident
திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் வயத் (34). கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணமாகி பிரன்கவி (4), பிராங்கிளின் ஜோ( 2) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர், விஷமங்களத்திலிருந்து நாகராஜம்பட்டிக்கு தனது இரண்டு குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் உட்காரவைத்து கடைக்கு அழைத்துச்சென்றுள்ளார். அப்போது, சாலையில் எதிரே வந்த டிராவல்ஸ் வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமக மோதியதில் சரத்குமார் உட்பட மற்றும் இரண்டு குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர்.

ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த மூவரையும் மீட்ட பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மூவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சரத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது, இரண்டு குழந்தைகளில் ஒருவர் தருமபுரி மருத்துவமனையிலும், மற்றொருவர் சேலம் அரசு மருத்துவமனையிலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி