கள்ளக்குறிச்சியில் இருந்து திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு 7 பேர் காரில் பயணம் செய்துள்ளனர். கார், திருவண்ணாமலை நகரப் பகுதியில் உள்ள கிரிவலப்பாதையில் சென்றுக்கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி ஒன்று அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில், கார் ஓட்டுநர் பாலன் மற்றும் வனஜா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் திருவண்ணாமலை அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து திருவண்ணாமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணத்திற்கு சென்ற போது கோர விபத்து; திருவண்ணாமலையில் நிகழ்ந்த சோகம்!
திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே கார் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் திருமணத்திற்கு சென்ற இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 15 Apr 2022, 12:26 pm
ஹைலைட்ஸ்:
- திருவண்ணாமலை அருகே சாலை விபத்து
- திருமண விழாவிற்கு சென்ற இருவர் பலி