ஆப்நகரம்

ச்சீ..! சொத்துக்காக இப்படியா..? - அரக்கோணத்தில் நிகழ்ந்த அவலத்தை பாருங்க!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தோல் ஷாப் பகுதியில் பிறந்து 40 நாட்களே ஆன குழந்தை கழிவறையில் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குழந்தையின் தந்தை வழி உறவினர்கள் இருவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 8 Jun 2022, 11:48 am
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தோல் ஷாப் பகுதியை சேர்ந்தவர் மனோ( வயது 22). இவர் திருநின்றவூரில் உள்ள பூக்கடையில் பூமாலை கட்டும் வேலை செய்து வருகின்றார். இவரது மனைவி அம்சா நந்தினி( வயது 19). இவர் தேவதானபட்டினத்தை சேர்ந்தவர். வேவ்வேறு பிரிவை சேர்ந்த இருவரும் காதலித்து 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் கடந்த 40 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
Samayam Tamil Arakkonam baby murder


கடந்த 5-ம் தேதி நள்ளிரவு குழந்தைக்கு, தாய் அம்சா நந்தினி பால் கொடுத்துவிட்டு குழந்தை யுவன் மற்றும் மாமியாருடன் தரையில் ஒன்றாக படுத்த உறங்கியுள்ளானர்கள். கணவர் அருகில் கட்டிலில் தூங்கியதாக கூறப்படுகிறது. மீண்டும் நள்ளிரவு ஒரு மணியளவில் குழந்தைக்கு தாய் பால் கொடுத்துவிட்டு தூங்கியுள்ளார். அதிகாலை 2 மணிக்கு எழுந்து பார்த்த போது குழந்தை இல்லாததை கண்ட அம்சா நந்தினி அதிர்ச்சியடைந்து கணவர், மாமியாரை எழுப்பியுள்ளார்.

வீடு முழுவதும் தேடியும் குழந்தை இல்லாத நிலையில், வீட்டிற்கு வெளியே உள்ள கழிவறையில் உள்ள பிளாஸ்டிக் பக்கெட் நீரில் முழ்கடித்து தலைகுப்புற இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தந்தை மனோ அளித்த புகாரின் பேரில் அரக்கோணம் நகர காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை நடத்தினர். முதற்கட்ட விசாரனையில் குழந்தையின் தந்தை மனோவின் சகோதரி தேன்மொழி ( வயது 52), மற்றும் அவரது மகள் பாரதி ( வயது 30) ஆகிய இருவரும் சேர்ந்து குழந்தையை கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
Online Rummy: ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை; அமைச்சர் துரைமுருகன் கூறியது என்ன?

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில் “மனோவின் தந்தை இறந்த பின் அவருடைய வீட்டுமனை தேன்மொழிக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அது கிடைக்கவில்லை. மனோவின் தாய் கீதா கஷ்டப்பட்டு அந்த இடத்தில் சிறிய வீடுகட்டி மகனுடன் வசித்து வருகின்றார். தனது இளைய மகளை மனோ திருமணம் செய்யாமல் வேறு சமூக பெண்ணை திருமணம் செய்து ஆண் வாரிசும் பிறந்ததால் மேலும் ஆத்திரமடைந்த தேன்மொழி குழந்தையை கொலை செய்ய மகளுடன் திட்டமிட்டதாக தெரிகிறது.

மேலும், குழந்தையின் தாய் அம்சா நந்தினியை தீய சக்தி பிடித்துள்ளதாக கூறி அடிக்கடி நாள் முழுவதும் வீட்டில் அடைத்து மந்தீரிகம் செய்வதாக கூறி வேப்பிலையால் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.குழந்தையின் தந்தை மனோ தனது பெண்ணை திருமணம் செய்யாமல் வேறு பெண்ணை மணந்தது, சொத்து கிடைக்காத விரக்கதியால் திட்டமிட்டு சம்பவத்தன்று இரவு வீட்டின் வெளியே படுத்திருந்த தேன்மொழி பலமுறை உள்ளே சென்று முயற்சித்து இறுதியாக அனைவரும் உறங்கிய பின் குழந்தையை தூக்கிச் சென்று பக்கெட் நீரில் தலைகீழாக போட்டுவிட்டு ஒன்றும் தெரியாதது போன்று படுத்து உறங்கியதாகவும் பின்னர் அனைவரும் தேடும்போது தானும் தனது மகளும் சேர்ந்து தேடியதாக கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி