ஆப்நகரம்

வேலூர் : துப்பறியும் மோப்பநாய் உயிரிழப்பு... காவல்துறை கவலை

வேலூர் மாவட்டத்தின் பல முக்கிய குற்ற வழக்குகளில் துப்பு துலக்கிய போலீஸ் மோப்ப நாய் புற்றுநோயால் உயிரிழந்துள்ளது.

Samayam Tamil 23 Jan 2021, 4:02 pm
வேலூர் மாவட்ட காவல்துறையில் மோப்பநாய் பிரிவில் சிம்பா, சன்னி, லூசி, அக்னி என்ற 4 மோப்ப நாய்கள் வழக்குகள் குறித்து துப்பு துலக்க பயன்படுத்தி வருகின்றனர்.
Samayam Tamil Died Dog


இதில் சன்னி மற்றும் சிம்பா கொலை மற்றும் கொள்ளை சம்பந்தப்பட்ட குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இதில் மோப்பநாய் சன்னிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கால்நடை டாக்டர்கள் சன்னியை பரிசோதனை செய்துள்ளனர். அப்போது சன்னிக்கு வாய்ப் புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளிக்கப்பட்டு, சன்னியை வேலூர் கொண்டு வந்து தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்தது.



ராட்சத பேனர்களால் மக்களை பயமுறுத்தும் அதிமுக...

இந்த நிலையில் இன்று சாப்பிட முடியாத நிலை உருவாகி சன்னி இன்று காலை திடீரென உயிரிழந்துள்ளதுபின்னர் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சன்னி மனித உடலை அடக்கம் செய்வது போல் நல்லடக்கம் செய்து போலீசார் அஞ்சலி செலுத்தினர்.

பல்வேறு கொலை வழக்குகளில் முக்கிய பங்கு வகித்த சன்னி உயிரிழந்தது காவலர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி