ஆப்நகரம்

வேலூர்: இலவச சிலம்ப வகுப்புகள் நடத்தும் இளைஞர்கள்...

காட்பாடியில் பாரம்பரிய கலையான சிலம்பத்தை இலவசமாக பயிலும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க அரசோ தனியாரோ உதவிட வேண்டுமென கோரிக்கை

Samayam Tamil 23 Feb 2021, 11:02 pm
வேலூர்மாவட்டம்,காட்பாடியில் தமிழகத்தின் பாரம்பரிய கலைகள் அழியாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கருணாகரன்,உதயகுமார்,ஜெயவேலு ஆகிய மூன்று பேர் இணைந்து காட்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கூலித்தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கும், ஏழை மாணவர்களுக்கும் இலவசமாகவே சிலம்பம் சுருள் வாள் போன்ற கலைகளை கற்று தருகிறார்கள்.
Samayam Tamil fp silambam


இதில் சுமார் 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு இக்கலைகளை பயின்று வருகின்றனர். இக்கலையை கற்றுத் தருவது மட்டுமல்லாமல் மாணவர்களை போட்டிகளில் பங்கேற்று சாதனைகளை படைக்கும் திறமை சாலிகளாக உருவாக்கி வருகிறார்கள்.

குடியாத்தத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் 47 மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு போட்டிகளில் பங்கேற்று இதில் 12 பேர் வெற்றி பெற்றனர். இவர்கள் திருப்பூரில் மார் ஸ் 4,5,6 ஆகிய தேதிகளில் மாநில அளவிலான சிலம்பம் போட்டிகளில் பங்கேற்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

பிரதமர் கூட்டத்தில் 5 லட்சம் பேர் கூடுவார்கள்... ஏற்பாடுகளை விவரிக்கும் வானதி சீனிவாசன்

இந்த ஏழை மாணவர்கள் சாதனை படைக்க மாநில அரசோ அல்லது தனியார் நிறுவனங்களோ இவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற உதவி செய்ய கோருகின்றனர். இந்த மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று அகில இந்திய அளவிலான சிலம்பம் போட்டிகளில் கலந்துகொள்ள மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர் இதற்கு அரசு உதவி செய்து இது போன்று அழிந்து வரும் கலைகளை பாதுகாக்க வேண்டுமென மாணவர்கள் கோருகின்றனர்

அடுத்த செய்தி