வேலூர் மாவட்டம் திருமணி அடுத்த உண்ணாமலை சமுத்திரம் பகுதியை சேர்ந்த மணி - முனியம்மா தம்பதியினரின் 2 வது மகள் லட்சுமி. இவர்களது உறவினர்களான காட்பாடி கழிஞ்சூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ராஜேசுக்கு லட்சுமியை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு பெண் குழந்தை என 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு லட்சுமி ராஜேஷ் வீட்டில் உயிரிழந்ததாக உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.
பதறி அடித்துக்கொண்டு ராஜேஷ் வீட்டுக்கு வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் லட்சுமியின் உடலை கண்டு கதறி அழுதனர். மேலும், சம்பவ இடத்துக்கு செல்வதற்கு முன்பே லட்சுமியின் உடலை ராஜேஷ்
வீட்டார் அப்புறப்படுத்தியுள்ளனர்.
திருமணம் ஆன நாளில் இருந்து லட்சுமியை அவரது கணவர் ராஜேஷும், மாமனார், மாமியாரும் துன்புறுத்தி வந்ததாகவும், இவர்கள் தான் நேற்று லட்சுமியை அடித்து மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்ததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விருதம்பட்டு காவல் நிலையத்தில் லட்சுமியின் குடும்பத்தார் புகார் அளித்தனர்.
புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காததால் இறந்த லட்சுமியின் உறவினர்கள் இன்று மாலை திருமணியில் இருந்து விருதம்பட்டு செல்லும் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த லத்தேரி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை எடுத்து மறியல் கைவிடப்பட்டது.
மேலும் தங்களது மகள் லட்சுமியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், 2 பிள்ளைகளையும் தங்களிடம் ஒப்படைத்து அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு பெண் குழந்தை என 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு லட்சுமி ராஜேஷ் வீட்டில் உயிரிழந்ததாக உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.
பதறி அடித்துக்கொண்டு ராஜேஷ் வீட்டுக்கு வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் லட்சுமியின் உடலை கண்டு கதறி அழுதனர். மேலும், சம்பவ இடத்துக்கு செல்வதற்கு முன்பே லட்சுமியின் உடலை ராஜேஷ்
வீட்டார் அப்புறப்படுத்தியுள்ளனர்.
திருமணம் ஆன நாளில் இருந்து லட்சுமியை அவரது கணவர் ராஜேஷும், மாமனார், மாமியாரும் துன்புறுத்தி வந்ததாகவும், இவர்கள் தான் நேற்று லட்சுமியை அடித்து மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்ததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விருதம்பட்டு காவல் நிலையத்தில் லட்சுமியின் குடும்பத்தார் புகார் அளித்தனர்.
புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காததால் இறந்த லட்சுமியின் உறவினர்கள் இன்று மாலை திருமணியில் இருந்து விருதம்பட்டு செல்லும் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த லத்தேரி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை எடுத்து மறியல் கைவிடப்பட்டது.
மேலும் தங்களது மகள் லட்சுமியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், 2 பிள்ளைகளையும் தங்களிடம் ஒப்படைத்து அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.