ஆப்நகரம்

விளையாட்டாக மூழ்கிய இளைஞர்: தேசிய பேரிடர் குழு வந்து உடலை எடுத்தது!

வேலூர் குடியாத்தம் அருகே கிணற்றில் மூழ்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்து சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 19 Jan 2021, 1:02 pm
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால்(27). லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். வேணுகோபால் தனது நண்பர்களுடன் கன்னிகாபுரம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.
Samayam Tamil விளையாட்டாக மூழ்கிய இளைஞர்: தேசிய பேரிடர் குழு வந்து உடலை எடுத்தது!


குழித்துக் கொண்டிருந்தபோது திடீரென தண்ணீரில் மூழ்கி உள்ளார். நீண்ட நேரம் நண்பர்கள் தேடியும் வேணுகோபாலைக் காணவில்லை. இதைத் தொடர்ந்து நண்பர்கள் குடியாத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

குடியாத்தம் போலீசார் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். தீயணைப்புத் துறையினர் தேடியும் கிடைக்காததால் தேசிய பேரிடர் மீட்புப் படையினரை வரவழைக்க ஏற்பாடு செய்தனர்.

Madurai City Crime Incident: சாலை விபத்துகள் கம்மி, ஆனா கஞ்சா வழக்குகள் அதிகம்!

தேசிய பேரிடர் மீட்புக் குழு சுமார் 3 மணி நேரத் தீவிர முயற்சியில் வேணுகோபாலின் உடலை மீட்டனர். பின்னர், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக குடியாத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி