ஆப்நகரம்

வேலை கிடைக்காததால் வேதனை: திருப்பத்தூர் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

திருப்பத்தூர் அருகே டிபளமோ தொழிற்கல்வி படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

Samayam Tamil 15 May 2022, 5:35 am
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட திம்மனாமத்தூர் ஊராட்சி குறுகப்பள்ளி பகுதியில் வசிப்பவர் முருகம்மாள் என்கிற வரலட்சுமியின் மகன் பாரி வள்ளல் (வயது 23).
Samayam Tamil tamil nadu unemployment
கோப்புப்படம்


டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு ஆங்காங்கே சிறு வேலைகளை செய்து வந்த இவருக்கு நிரந்தரமாக ஓர் அரசு வேலை கிடைக்கவில்லை என்கிற ஏக்கம் நீண்ட நாட்களாக இருந்துள்ளது. இதனை தன்னுடைய நண்பர்களிடமும் மற்றும் தாயிடமும் அவ்வப்போது கூறி புலம்பியதாக தெரிகிறது.

இந்நிலையில் சில மாதங்களாக கொரோனா நோய்த்தொற்று காலத்தில் வேலையில்லாமல் வெறுமனே வீட்டில் இருந்த பாரிவள்ளல் திடீரென மனம் உடைந்து நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவத்தை கண்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் திருப்பத்தூர் கிராமிய காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிராமிய காவல்துறை பாரி வள்ளலின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்பு தற்கொலை சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி