ஆப்நகரம்

3ஆம் வகுப்பு மாணவிக்கு 8ஆம் வகுப்பு மாணவன் பாலியல் தொல்லை

விழுப்புரம் அருகே மூன்றாம் வகுப்பு மாணவியை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்திய எட்டாம் வகுப்பு மாணவன் போக்சோ சட்டத்தில் கைது

Samayam Tamil 8 Mar 2021, 2:07 pm
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் கூலித்தொழிலாளி.இவருக்கு சுதா என்கின்ற மனைவி மற்றும் 8 வயது மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்று இரவு வீட்டிற்கு வந்த சிவகுமார் தன் மகள் அழுது கொண்டிருந்ததை பார்த்து மகளிடம் கேட்டுள்ளார்.
Samayam Tamil pocso act


அதற்கு பதிலளித்த அவர், அருகில் உள்ள சிறுவன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி இருக்கிறாள். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் மரக்காணம் காவல் நிலைத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் அச்சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். எட்டு வயதே நிரம்பிய இந்த சிறுமி பாலியல் சீண்டலுக்கு உட்படுத்திய தால் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

பாஜக நச்சரிப்பால் கடுப்பான ரங்கசாமி... தனித்து நிற்க முடிவு

விழுப்புரம் சுற்றுவட்டாரப் பகுதியில் அண்மைக்காலமாக இதுபோன்ற சமப்வங்கள் அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் குழந்தைகள் பாதுகாப்பு நலவாரியத்துடன் இணைந்து வேண்டிய முயற்சிகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

அடுத்த செய்தி