ஆப்நகரம்

தலைமுடியை திருடும் மர்ம நபர்கள்: திண்டிவனத்தில் போலீசார் விசாரணை தீவிரம்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 60 ஆயிரம் ரூபாய் பணம், 2 கிலோ தலை முடி திருடு போனது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Curated bySrini Vasan | Samayam Tamil 28 Jun 2022, 1:05 pm
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் செஞ்சி சாலை சுதாகர் நகரை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் கண்ணதாசன் (48), இவர் தலைமுடி வியாபாரம் செய்து வருகிறார்.
Samayam Tamil பூட்டை உடைத்து பலே கொள்ளை!


நேற்று இரவு வியாபாரத்திற்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த கண்ணதாசன், தனது பேண்ட் பாக்கெட்டில் 60 ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்து விட்டு அவரது மகனை வீட்டின் உள்ளே தூங்க வைத்துவிட்டு வெளியில் பூட்டி உள்ளார். பின்னர் அவரது மற்றொரு வீடான பின்பக்கம் உள்ள வீட்டிற்கு உறங்கச் சென்றுவிட்டார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இன்று அதிகாலை எழுந்து வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் உள்ளே சென்று பார்த்தபோது பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த 60 ஆயிரம் ரூபாய் பணம், சுமார் 2 கிலோ அளவிலான தலைமுடி ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து கண்ணதாசன் ரோசணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் தலைமுடி திருடி சென்ற நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
Srini Vasan

அடுத்த செய்தி