ஆப்நகரம்

விழுப்புரம் கலெக்டர் ஆஃபீஸ்க்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட்; ஆடிப்போன ஊழியர்கள்!

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மண்டி கிடக்கும் புதர்களை அழிக்க ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆட்சியர் அலுவலகத்தின் முன்புறம், மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலகம் அருகில் வாய்கள் பகுதியில் பாம்பு நடமாட்டம் இருந்துள்ளது. இதன் அருகில் தான் தேனீர் கடை, ஆண்கள் பெண்கள் கழிவறை உள்ளது. இந்த வழியில் செல்பவர்கள் பாம்பின் நடமாட்டத்தைக் கண்டு அச்சம் அடைந்துள்ளனர். பாம்பைப் பார்த்த ஆட்சியர் வளாக துப்புரவு பணியாளர்கள் மற்றும் அங்கு கடை நடத்துபவர்கள் இது குறித்து உடனடியாக விழுப்புரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 27 Sep 2022, 2:06 pm

ஹைலைட்ஸ்:

  • விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் பாம்பு
  • விழுப்புரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல்
  • மண்டி கிடக்கும் புதர்களை அழிக்க கோரிக்கை



ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பிடிபட்ட நல்ல பாம்பு
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பிடிபட்ட நல்ல பாம்பு
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் அனைத்து அரசு துறை அலுவலகங்களும் செயல்பட்டு வருகிறது. புதிய கட்டிடங்களுக்கான கட்டுமானப் பணிகளும் நடந்து வருகிறது. மேலும், அலுவலகத்தின் பல இடங்களில் கட்டிடங்கள் இல்லாத பகுதிகளில் செடி, கொடிகள் அடந்து புதர்மண்டி காணப்படும் .
இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் பாம்பு, தேள், கீரி உள்ளிட்ட ஜந்துக்கள் உலா வருவது வழக்கம். ஏற்கெனவே இங்கு பல முறை பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆட்சியர் அலுவலகத்தின் முன்புறம், மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலகம் அருகில் வாய்கள் பகுதியில் பாம்பு நடமாட்டம் இருந்துள்ளது.


இதன் அருகில் தான் தேனீர் கடை, ஆண்கள் பெண்கள் கழிவறை உள்ளது. இந்த வழியில் செல்பவர்கள் பாம்பின் நடமாட்டத்தைக் கண்டு அச்சம் அடைந்துள்ளனர். பாம்பைப் பார்த்த ஆட்சியர் வளாக துப்புரவு பணியாளர்கள் மற்றும் அங்கு கடை நடத்துபவர்கள் இது குறித்து உடனடியாக விழுப்புரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விழுப்புரம் தீயணைப்பு படை வீரர்கள், அங்கு வாய்க்காலில் மறைந்ததிருந்த பாம்பை பத்திரமாக பிடித்தனர். பிடிபட்ட பாம்பு நல்ல பாம்பு என்றும், சுமார் 2அடி நீளம் இருக்கும் என்றும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

பாஜக பற்றவைத்த நெருப்பு; பற்றி எரியும் புதுவை அரசியல்!

அதையடுத்து, பிடித்த பாம்பை மக்கள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிக்குள் கொண்டு விட்டனர். மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் புதர்கள் அதிகம் காணப்படுவதாகவும், இதனை வனத்துறை மூலம் அழிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வளாக ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி