ஆப்நகரம்

விழுப்புரம்: 'தல'யால் வரையப்பட்ட ஓவியம்! - அஜித் பிறந்த நாளுக்கு அசத்தல் பரிசு!

நடிகர் அஜித் பிறந்தநாள் முன்னிட்டு விழுப்புரத்தில் கைகளைப் பயன்படுத்தாமல், தலையால் அஜித்தின் படத்தை வரைந்து ஓவியர் அசத்தியுள்ளார்.

Written byபிரபாகர் B | Samayam Tamil 1 May 2023, 7:47 am
இன்றைய தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதை வென்ற முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தான் நடிகர் அஜித் குமார். தனது இளமைப் பருவத்திலிருந்தே ரேஸ் கார், பைக் ஓட்டுவதில் ஆர்வம் காட்டி வந்த அவர் மும்பை, சென்னை, தில்லி போன்ற இடங்களில் நடந்த ரேஸ்களில் கலந்து கொண்டு வெற்றிப் பெற்றுள்ளார்.
Samayam Tamil ajith painting
ajith painting


நடிகர் அஜித் பிறந்த நாள்

மேலும் சர்வதேச அரங்கில் ரேஸ்களில் பங்கேற்கும் இந்தியர்களில் ஒருவர் என்றும் ஃபார்முலா சாம்பியன் போட்டியில் பங்கேற்ற ஒரே இந்திய நடிகரென்ற பெருமையை பெற்றவர் அஜித். எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை தனது நடிப்பால் உருவாக்கியுள்ளார்.

நடிகர் அஜித் குமாருக்கு இன்று 52-வது பிறந்தநாள். இதனையொட்டி, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இணையத்தில் வாழ்த்து சொல்வது, போஸ்டர் ஒட்டுவது என ரசிகர்கள் அமர்களப்படுத்தி வருகின்றனர்.
அஜித்தை தூங்க விடாமல் செய்யும் தூங்கா நகரம் ரசிகர்கள் - அரசியல் வசனத்துடன் பிறந்த நாள் போஸ்டர்!
ஓவிய ஆசிரியர் அசத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை கிராமத்தை சேர்ந்த ஓவியர் சு.செல்வம் அஜித்குமார் பிறந்தநாள் முன்னிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறும் விதமாக கைகள் பயன்படுத்தாமல் தன்னுடைய தலையால் அஜித் படத்தை வரைந்தார்.

சிறுகம்பியில் வளையம் போன்று செய்து அதில் பிரஷ் வைத்துக் கொண்டு தன்னுடைய தலையில் மாட்டிக் கொண்டு பின் ஓவியர் செல்வம், தன் தலையை அசைத்து அசைத்து நீர் வண்ணத்தில் பிரஷ்ஷால் தொட்டு 15 நிமிடங்களில் அஜித்தின் படத்தை வரைந்து அசத்தி பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினார்.

இந்த ஓவியத்தை பார்த்து அஜித் ரசிகர்கள் அனைவாரும் ஓவியர் செல்வத்தை பாராட்டி வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
பிரபாகர் B
கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவன். ஊடகத்துறையில் 4 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறேன். எழுத்தால் சமூகத்தில் பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதே எனது கருத்து. தற்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி