விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அதிமுக தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணிப் பெண் உட்பட 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து காந்தி சிலை அருகே அதிமுக வேட்பாளர் அர்ஜுனனை ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதற்காக திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வாகனங்கள் மூலம் ஆட்களை அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் திண்டிவனம் அடுத்த மேல்பாக்கம் கிராமத்திலிருந்து டாட்டா ஏஸ் வாகனத்தில் 40 பேர் தேர்தல் பிரச்சாரத்திற்காக அழைத்துக் கொண்டு வரப்பட்டனர்.
வாகனத்தை மேல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாபு மகன் சதீஷ்குமார்(23), என்பவர் ஓட்டி வந்தார். கல்லூரி சாலை ரயில்வே மேம்பாலம் ஏரி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை திசையில் இறங்கும் போது குறிப்பிட்ட வாகனம் பாரம் தாங்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
திமுகவும், பிஜேபியும் வெவ்வேறு அல்ல... சீமான் ஸ்மார்ட் பேச்சு!
இந்த விபத்து காரணமாக வாகனத்தில் வந்த 40 பேர் காயமடைந்தனர். அருகிலிருந்தவர்கள் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் போலீஸ் வாகனங்களில் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
படுகாயமடைந்த நபர்களை ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து காந்தி சிலை அருகே அதிமுக வேட்பாளர் அர்ஜுனனை ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதற்காக திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வாகனங்கள் மூலம் ஆட்களை அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் திண்டிவனம் அடுத்த மேல்பாக்கம் கிராமத்திலிருந்து டாட்டா ஏஸ் வாகனத்தில் 40 பேர் தேர்தல் பிரச்சாரத்திற்காக அழைத்துக் கொண்டு வரப்பட்டனர்.
வாகனத்தை மேல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாபு மகன் சதீஷ்குமார்(23), என்பவர் ஓட்டி வந்தார். கல்லூரி சாலை ரயில்வே மேம்பாலம் ஏரி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை திசையில் இறங்கும் போது குறிப்பிட்ட வாகனம் பாரம் தாங்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
திமுகவும், பிஜேபியும் வெவ்வேறு அல்ல... சீமான் ஸ்மார்ட் பேச்சு!
இந்த விபத்து காரணமாக வாகனத்தில் வந்த 40 பேர் காயமடைந்தனர். அருகிலிருந்தவர்கள் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் போலீஸ் வாகனங்களில் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
படுகாயமடைந்த நபர்களை ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.