ஆப்நகரம்

அசைவில்லாமல் விவசாய நிலத்தில் கிடந்த மான்: விழுப்புரம் வனத்துறை சூப்பர் செயல்!

விழுப்புரம் மரக்காணம் அருகே விவசாய நிலத்தில் உடல் நிலை சரியில்லாது படுத்திருந்த மானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பினர்.

Samayam Tamil 23 Jul 2021, 8:35 pm
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த குரும்புரம் வனப்பகுதியில் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் மான் ஒன்று விவசாய நிலத்தில் காணப்பட்டது.
Samayam Tamil அசைவில்லாமல் விவசாய நிலத்தில் கிடந்த மான்: விழுப்புரம் வனத்துறை சூப்பர் செயல்!


இதனைக் கண்ட பொது மக்கள் உடனடியாக மரக்காணம் காவல் நிலையத்திற்கும், மரக்காணம் வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மரக்காணம் காவல்துறையினர் மற்றும் மரக்காணம் பகுதி வனத்துறையினர் மானை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
புது மாவட்டம் கள்ளக்குறிச்சிக்கு இப்படி ஒரு திட்டமா?: நிறைவேறுமா அதிகாரியின் திட்டம்!
உடல்நிலை சரியில்லாத நிலையில் மீட்கப்பட்ட மானை அப்பகுதி பொது மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு சென்றனர். சிகிச்சை முடிந்த பிறகு மானை மீண்டும் அதே வனப்பகுதியில் விடப்போவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி