ஆப்நகரம்

அம்மா... அம்மா... 'சாமி விட்ருங்க' - கள்ளக்குறிச்சி கொடூரம்!

கள்ளக்குறிச்சியில் விவசாயி ஒருவரை கண்மூடித்தனமாக தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் ஒன்பதை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 13 May 2022, 7:01 am
கள்ளக்குறிச்சி பகுதியில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் அனைவரது செல்போனில் நேற்று இந்த வீடியோ தான் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு நிமிடம் 3 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் யாரோ ஒரு நபரை ஒரு கும்பல் டிராக்டர் ஒன்றில் அருகில் வைத்து கண்மூடித்தனமாக தாக்குகிறது.
Samayam Tamil Kallakurichi Farmer Attacked


வீடியோ முழுவதும் ஆபாச வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதோடு, மிருக வெறித்தனமான கோபத்துடன் கூடிய வன்மத்தை அந்த நபரின் மீது கும்பல் காட்டுகிறது. ஒரே வெட்டு... காலை உடைச்சி விடு... என்று அந்த கும்பலில் ஒருவன் கூற, வேணாம் சாமீ., ஏற்கனவே உடைந்த கால் சாமி விட்டுருங்க என்று கதறுகிறார் அந்த நபர்.

உடலெங்கும் ரத்தம் சொட்ட சொட்ட இருக்கும் அந்த நபரை தாக்கிய போது அம்மா... அம்மா என்று கதறிய காட்சி காண்போரை கண்கலங்க வைக்கிறது. இந்த கொடூர சம்பவத்தில் வீடியோ காட்சிகள் பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில், கள்ளக்குறிச்சி மாவட்டம், எறையூர் கிராமத்தை சேர்ந்த ஜெய்சன் என்பவர் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலுக்காக ஜஸ்டீன் தரப்பிடம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. தேர்தல் முடிந்து 6 மாதங்கள் ஆனபோதும் பணத்தை திருப்பிக் கொடுக்காததால் இருதரப்பினர் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், கடந்த திங்கட்கிழமையன்று ஜெய்சனின் தந்தை வின்செண்ட் பால்ராஜ் வயலுக்கு சென்றுள்ளார். அப்போது ஜஸ்டீன், அவரது நண்பர்கள் சிலர் அவரை வழிமறித்து பணம் கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாய்தகராறில் அந்த கும்பல் விண்செண்ட் பால்ராஜை கொடூரமாக தாக்கியுள்ளது.
ஊழலை அம்பலப்படுத்திய 'சமயம் தமிழ்' - ஒரே நாளில் நடந்த அதிரடி மாற்றம்!

அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, சம்பம் தொடர்பாக கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த இளவனாசூர்கோட்டை போலீசார் தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். கொடூர கும்பல் திருக்கோவிலூர் அருகே பதுங்கியுள்ளதாக வந்த தகவலை அடுத்து அங்குச் சென்ற போலீசார் ஜஸ்டீன், ஜான் மனோஜ், சைமன் உள்ளிட்ட 9 பேரை கைது செய்துள்ளனர்.

அடுத்த செய்தி