ஆப்நகரம்

ஆசிரியர்கள் இடையே கோஷ்டி மோதல்; விழுப்புரம் அரசு பள்ளியில் நடந்தது என்ன?

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட எந்தவித வசதிகளும் இல்லாத காரணத்தினால் 50-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் அரசுப் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 17 Jun 2022, 6:24 pm
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த வெளியனூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 62 மாணவர்கள் பயின்று வருகின்றனர். தற்போது இந்த பள்ளியில் கட்டிட பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அதற்குப் பயன்படுத்தப்படும் மணலை தலைமை ஆசிரியரின் அறையில் கொட்டி வைத்து பூட்டிவிட்டு, மாணவர்கள் அமர்ந்து படிக்கும் அறையை தலைமை ஆசிரியர் பயன்படுத்தி வரும் நிலையில் மாணவர்கள் பள்ளியின் வெளியில் அமர்ந்து படிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil Viluppuram Govt school


மேலும், இப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாத காரணத்தினால் மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் அங்கு பணிபுரியும் தலைமை ஆசிரியர் பள்ளியிலேயே புகை பிடிப்பது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், இதனை கண்டித்து இன்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பெற்றோர் என 50-க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள், பின்பு அங்கு வந்த கல்வி அதிகாரிகள் பெற்றோர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனை அடுத்து பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
புறக்கணிக்கப்பட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான்; விழுப்புரம் திமுகவில் நடப்பது என்ன?

பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் இரண்டு குழுக்களாக உள்ளதாகவும், இதில் ஒருவரை ஒருவர் குறை கூறி அதை மாணவ மாணவிகளின் பெற்றோர்களிடம் கொண்டு சென்று ஆதாயம் காண்பதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை இதை தீவிரமாக விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பள்ளியில் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

அடுத்த செய்தி