ஆப்நகரம்

விழுப்புரத்தில் வீட்டில் உள்ள பொருட்கள் கொள்ளை; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் கிராமத்தில் வீடு மற்றும் சர்ச் உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளை. மர்ம நபர்ககளை காவலர் துறையினர் தேடி வருகின்றனர்.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 20 Apr 2023, 3:12 pm

ஹைலைட்ஸ்:

  • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டடு கொள்ளை அடித்த மர்ம நபர்கள்
  • தடயங்களை சேகரித்து போலீசார் வழக்கு பதிவு
  • சர்ச்சின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டுள்ள காட்சி
வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டுள்ள காட்சி
விடுமுறை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி வயது 42. இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் விடுமுறை தினங்களில் மட்டுமே இங்கே வருவது வழக்கம். அருகே உள்ள அவரது தந்தை கோவிந்தசாமி ஜெயந்தி வீட்டை பார்த்து விட்டு செல்வது வழக்கம்.

வீட்டின் பூட்டு உடைப்பு

இந்த நிலையில் இன்று காலை ஜெயந்தியின் தந்தை கோவிந்தசாமி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டடு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த சிலிண்டர், இன்வெர்ட்டர், டிவி மற்றும் பீரோவில் இருந்த பொருட்கள் திருடு போயிருந்தது.

தடயங்கள் சேகரிப்பு

இதுகுறித்து ஒலக்கூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். தகவலின் பெயரில் ஒலக்கூர் சப் இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான போலீசார் தடயங்களை சேகரித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரோவில் அருகே போலீஸ் போல் நடித்த வாலிபர்: பொது மக்களிடம் வசூல் வேட்டை!
சர்ச்சின் பூட்டு உடைப்பு

மேலும் அருகே உள்ள சர்ச்சிலும் கொள்ளையர்கள் சர்ச்சின் பூட்டை உடைத்துள்ளனர். அங்கு எந்த பொருளும் இல்லாததால் கொள்ளையர்கள் அங்கிருந்து ஏமாந்து சென்றுள்ளனர்.

மர்ம நபர்கள் கைவரிசை

மேலும் இந்த பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக சர்ச் மற்றும் அருகே உள்ள வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி