ஆப்நகரம்

தந்தை, மகன் ஒதுங்கி இருப்பது நல்லது; ஓபிஎஸ்சுக்கு அதிமுக பகிரங்க மிரட்டல்!

தந்தையும், மகனும் ஒதுங்கி இருப்பதே நல்லது என ஓபிஎஸ்சுக்கு அதிமுக பகிரங்க மிரட்டல் விடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 1 Jul 2022, 6:23 pm
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு இடையே இதுவரை நிலவி வந்ததாக, கூறப்பட்ட பனிப்போர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
Samayam Tamil ஓபிஎஸ், அவரது மகன்
ஓபிஎஸ், அவரது மகன்


அதிமுகவில், ஓ.பி.எஸ் ஓரங்கட்டப்படுகிறார் என்கிற ஆதரவாளர்களின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் முன்னெப்போதும் இல்லாத வகையில் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கைகளுக்கு செக் வைக்கும் விதமாக தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றை நாடி இருக்கிறார். இதனால் அதிமுகவில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.


இந்நிலையில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அதிமுக மாவட்ட கழக செயலாளர் குமரகுரு செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:

இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து முயன்று வருகிறார். அதிமுகவை காப்பாற்றுகின்ற தலைவராக ஓ.பன்னீர்செல்வம் இல்லை என அனைத்து தொண்டர்களும் அறிந்து கொண்டனர்.

அதிமுகவில் இருந்து எடப்பாடி நீக்கம்; தலைமைக்கழகம் பெயரில் போஸ்டர்!

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஒற்றை தலைமையின் கீழ் தான் அதிமுக இருக்க வேண்டும் என அதிமுக தொண்டர்கள் நினைத்து வருகின்றனர். திமுகவை எதிர்க்கக்கூடிய ஒரே துணிச்சல் உடைய தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான்.

ஒன்றரை கோடி தொண்டர்களை குழப்பாமல், இயக்கத்தை முடக்காமல் அதிமுகவின் மீது உண்மையிலேயே பற்று இருந்தால் நீங்கள் தயவு கூர்ந்து ஒதுங்கி இருந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைவதற்கும், கட்சி போவதற்கும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

காணாமல் போகும் திமுக அரசு?; திருமாவை இழுத்து இந்து முன்னணி வம்பு!

எந்த ஒரு இடையூறும் இல்லாமல் இருந்தால் உங்களுக்கும் நல்லது. உங்களது வாரிசுக்கும் நல்லது. மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 49 செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து அதிமுக நிர்வாகிகளுமே எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஒற்றை தலைமைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அதிமுக கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு கூறினார். இந்த நிகழ்வில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி