கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக விடியல் அரசைக் கண்டித்து மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான குமரகுரு தலைமையில் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் முன்பு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உரிமைக்குரல் முழக்கப் போராட்டம் எனக் கையில் பதாகை ஏந்தியபடி திமுக அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினார். அப்பொழுது விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும் நீட் தேர்வை ரத்து செய்திடவும் வலியுறுத்தப்பட்டது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் குறைக்காத திமுக அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுகவிற்கு எதிராக இந்த போராட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக விடியல் அரசைக் கண்டித்து மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான குமரகுரு தலைமையில் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் முன்பு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உரிமைக்குரல் முழக்கப் போராட்டம் எனக் கையில் பதாகை ஏந்தியபடி திமுக அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினார். அப்பொழுது விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும் நீட் தேர்வை ரத்து செய்திடவும் வலியுறுத்தப்பட்டது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் குறைக்காத திமுக அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுகவிற்கு எதிராக இந்த போராட்டம் நடைபெற்றது.