ஆப்நகரம்

independence day 2022: 10 விரல்களில் 10 தலைவர்கள்.. கள்ளக்குறிச்சி ஆசிரியரின் மெய்சிலிக்கும் ஓவியம்!

கள்ளக்குறிச்சி ஓவிய ஆசிரியர் செல்வம் ஒரே சமயத்தில் 10 சுதந்திர போராட்ட வீரர்களின் ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளார்.

Samayam Tamil 14 Aug 2022, 3:38 pm
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த செல்வம். இவர், அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் அவர்களது ஓவியங்களை வரைவதோடு, நாட்டின் சிறப்பு வாய்ந்த விஷயங்களையும் ஓவியமாக வரைந்து அசத்தி வருகிறார்.
Samayam Tamil independence day


அந்த வகையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது கைகளில் உள்ள பத்து விரல்களில் பத்து வண்ண ஸ்கெட்ச்களை டேப் மூலம் ஒட்டிக்கொண்டு ஒரே சமயத்தில் பத்து சுதந்திரப் போராட்ட தலைவர்களின் உருவங்களை 20 நிமிடங்களில் வரைந்தார்.

வலது கைகளில் உள்ள 5 விரல்களால் நேதாஜி, கொடிகாத்த குமரன், பாரதியார், ராணி வேலுநாச்சியார், சரோஜினி நாயுடு. இடது கையில் உள்ள 5 விரல்களால் மகாத்மா காந்தி, பாலகங்காதர திலகர், நேரு, வல்லபாய் பட்டேல், வ.உ. சிதம்பரனார், ஆகியோர்களை "ஒரே சமயத்தில்" பத்து சுதந்திர போராட்ட தலைவர்களின் உருவங்களை வரைந்தார்.
"ஓசி டிக்கெட் தானே..? எங்கவேனாலும் போய் சொல்லு" - கள்ளக்குறிச்சி வீடியோ!

சுதந்திர தினத்தை முன்னிட்டு நம் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய, உயிர் நீத்த சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தலைவர்களை போற்று விதமாகவும், அவர்களுடைய தியாகங்கள் நினைவுக் கூறும் விதமாகவும் ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்கள் தனது இரண்டு கைகளில் உள்ள பத்து விரல்களின் மூலம் ஒரே நேரத்தில் பத்து சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் ஓவியங்கள் வரைவதை ஆச்சரியத்துடன் பார்த்து ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஓவிய ஆசிரியர் செல்வத்திற்க்கு பாராட்டுகள் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி