ஆப்நகரம்

ஊரே கூடி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி!

விக்கிரவாண்டி அடுத்த சிறுவள்ளி குப்பம் மந்தக்கரை கிராமத்தைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்து உறுப்பினர்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தீக்குளிக்க முயற்சி.

Samayam Tamil 26 Jul 2021, 6:12 pm
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த கள்ளிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சுமார் 25 ஆண்டுகளாக அதே கிராமத்தில் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
Samayam Tamil ஊரே கூடி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி!


இந்த சூழலில் அங்கிருந்து போராட்டக்காரர்களை உடனடியாக வெளியேற்றும் பணியில் விக்கிரவாண்டி வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மனமுடைந்து போன பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரும்ப ஒப்படைத்துவிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

விழுப்புரம் அருகே டாஸ்மாக் பார்களில் நுழைந்த போலீசார் அதிரடியாக 3 பேரைக் கைது செய்தனர்!
பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் இதைப்பார்த்து உடனடியாக மக்களைத் தடுத்து அசம்பாவிதம் நிகழாமல் பார்த்துக் கொண்டனர்.

தீக்குளிக்க முயன்ற பொதுமக்களை அலுவலகத்தினுள் அழைத்து வரச் சொன்ன மாவட்ட ஆட்சியர் மோகன் நேரடியாக விசாரணை மேற்கொண்டார்.

அப்போது மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க வீடு வேண்டும் என்றும், தாங்கள் வசிக்கும் இடத்திற்குப் பட்டா வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

அடுத்த செய்தி