ஆப்நகரம்

கள்ளக்குறிச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம் - பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவரின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Curated byM.முகமது கெளஸ் | Samayam Tamil 21 Apr 2023, 2:48 pm

ஹைலைட்ஸ்:

  • கள்ளக்குறிச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம்
  • குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல்
  • வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர் விசாரணை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Kallakurichi man suicide
கள்ளக்குறிச்சி மாவட்டம்; கள்ளக்குறிச்சி ராஜா நகர் ஏரிக்கரை பகுதியில் உள்ள பக்கவாட்டு சுவரின் ஓரம் உள்ள மரத்தில் ஆண் சடலம் ஒன்று தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
கிடைத்த அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கினர்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அந்த விசாரணையில் தூக்கில் தொங்கிய கள்ளக்குறிச்சி நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் என்பவரின் மகன் ராமச்சந்திரன் என்பது தெரியவந்தது. மேலும் இவர் குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக நமச்சிவாயபுரம் பகுதியில் உள்ள தனது குடும்பத்தை விட்டு கள்ளக்குறிச்சி பகுதியில் வருவதாக கூறப்படுகிறது.



அவ்வப்போது சொந்த ஊருக்கு வரும் ராமச்சந்திரன் அடிக்கடி தனது மனைவியிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதில் அவர்களுக்குள் சண்டை அதிகரித்துள்ளது.

டிடிவி கோட்டையை தகர்த்த எடப்பாடி - தஞ்சையில் தள்ளாடும் அமமுக?

இவ்வாறு அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படவே சொந்த ஊருக்கு வரும் அவர் மனைவியிடம் சண்டை போட்டுக் கொண்டு மீண்டும் கள்ளக்குறிச்சிக்கு திரும்பி விடுவார் எனக் கூறப்படுகிறது. அதனால் காவல் துறையினர் தற்போது அவர் குடும்ப பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
M.முகமது கெளஸ்
நான் முகமது கெளஸ். ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டமும் ஊடகவியல் துறையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளேன். டிஜிட்டல் ஊடகத்தில் எனக்கு இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ளது. க்ரைம் சார்ந்த செய்திகள் எழுதுவதில் முழு ஈடுபாடு காட்டும் ஆர்வம் உண்டு. தற்போது டிஜிட்டல் ஊடகமான டைம்ஸ் ஆப் இந்தியா, சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி