கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை கொட்டும் மழையிலும் சூடுபிடித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் விருகாவூர் கிராமத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு திமுக வேட்பாளர்களை ஆதரித்து கொட்டும் மழையில் குடை பிடித்தபடி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள பல்வேறு சாதனை திட்டங்களை பட்டியலிட்டு எடுத்துக்கூறி உதயசூரியன் சின்னத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பேசி வாக்குகள் சேகரித்தார். அப்ப்போது, பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார்.
கொட்டும் மழையிலும் குடை பிடித்தபடி ஏராளமான பொதுமக்கள் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரையை கேட்டதோடு அமைச்சர் அளித்த வாக்குறுதியை கேட்டு ஆர்வத்துடன் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
விசிக எம்எல்ஏ முயற்சிக்கு நல்ல பலன்; மகிழ்ச்சியில் துள்ளும் 50 கிராம மக்கள்!
இந்த உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின்போது கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வசந்தம். க.கார்த்திகேயன், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கிராம மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
கொட்டும் மழையிலும் குடை பிடித்தபடி ஏராளமான பொதுமக்கள் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரையை கேட்டதோடு அமைச்சர் அளித்த வாக்குறுதியை கேட்டு ஆர்வத்துடன் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
விசிக எம்எல்ஏ முயற்சிக்கு நல்ல பலன்; மகிழ்ச்சியில் துள்ளும் 50 கிராம மக்கள்!
இந்த உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின்போது கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வசந்தம். க.கார்த்திகேயன், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கிராம மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.