ஆப்நகரம்

திண்டிவனம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே அரசு பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

Samayam Tamil 25 Sep 2022, 2:24 pm
விழுப்புரம் மாவட்டம் நெடிமோழியனூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, ஆலகிராமம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
Samayam Tamil villupuram bus accident


இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும் மயிலத்தில் இருந்து போலீசாரும், திண்டிவனத்தில் இருந்து தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தலைக்குப்புற கவிழந்த பேருந்தில் சிக்கியிருந்த பயணிகளை பொதுமக்கள் உதவியுடன் மீட்கபட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த 4 பயணிகள் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும், லேசான காயமடைந்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அடுத்த செய்தி