ஆப்நகரம்

நாங்க சட்டம் போடுவோம் ஆனா கடைப்பிடிக்க மாட்டோம்… தமிழக அரசின் செயலால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி!

விழுப்புரம் - நாகை சாலை விரிவாக்க பணிக்காக ஆயிரக்கணக்கான பனைமரங்கள் வெட்ட்பபடும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 24 Oct 2021, 4:50 pm

ஹைலைட்ஸ்:

  • சாலை விரிவாக்க பணிக்காக வெட்டப்படும் ஆயிரக்கணக்கான மனை மரம்
  • பனை வெட்ட தடை விதித்த அரசே அதனை மீறுகிறது - சமூக ஆர்வலர்கள்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழி சாலை அமைக்க மத்திய அரசு கடந்த 2012-ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது. தற்போது சாலை அமைப்பதற்கான முதல் கட்ட பணிகள் துவங்கியது. விழுப்புரம், வளவனுார், கண்டமங்கலம், கடலுார், ஆலப்பாக்கம், சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி, காரைக்கால் வழியாக நாகப்பட்டினம் வரை 194 கி.மீ. துாரத்திற்கு (என்.எச் 45 ஏ) தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது.
இந்த திட்டத்திற்காக 6,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில் சாலையின் இரு புறமும் 45 மீட்டர் அகலத்திற்கு, சாலை கையகப்படுத்தப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்காக புதுச்சேரி மாநில பகுதியான மதகடிப்பட்டு மற்றும் புதுச்சேரியை ஒட்டியுள்ள விழுப்புரம் மாவட்ட பகுதியில் சாலையில் இருபுறங்களில் இருந்த ஆயிரக்கனக்கான பனை மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது. இவற்றில் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 400க்கும் மேற்பட்ட பனைமரங்கள் வெட்டப்பட்டுள்ளன.

கடந்த ஆக்ஸ்ட் மாதம் தமிழக அரசு வெளியிட்ட வேளாண் பட்ஜெட்டில் பனை மரம் வெட்டப்படுவது குற்றம், தவிர்க்க முடியாத சூழலில் ஆட்சியரின் அனுமதியை பெற்றுத்தான் வெட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் ஆங்காங்கே பொதுமக்கள் பனைமரங்களை வெட்டும் பட்சத்தில் அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டது.

ஆனால், சாலை விரிவாக்க பணி என்று கூறி அரசே ஆயிரக்கணக்கான பனை மரங்களை வெட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த பனைமரங்களை வெட்டாமல் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி