ஆப்நகரம்

ஜெயலலிதா மர்ம மரணம், முக ஸ்டாலினிடம் நியாயம் கேட்டு உளுந்தூர்பேட்டையில் போஸ்டர்கள்: பெரும் சர்ச்சை!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக நல்ல தீர்ப்பு வர வேண்டும் என்றும் காலம் கடந்த நீதி அநீதிக்குச் சமம் என்றும் முன்னாள் அதிமுக நிர்வாகி ஒருவர் உளுந்தூர்பேட்டை பகுதியில் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 23 Jul 2021, 2:13 pm
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரப் பகுதியில் அதிமுகவின் முன்னாள் திருநாவலூர் ஒன்றிய செயலாளர் ராஜா என்பவர் பரபரப்பு போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார். அதில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்றும் காலம் கடந்து நீதி அநீதிக்குச் சமம் என்ற தலைப்பிலும் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
Samayam Tamil ஜெயலலிதா மர்ம மரணம், முக ஸ்டாலினிடம் நியாயம் கேட்டு உளுந்தூர்பேட்டையில் போஸ்டர்கள்: பெரும் சர்ச்சை!


அதேபோல் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி போயஸ் கார்டனில் என்ன நடந்தது என்றும் எதற்காக ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அன்றைய தினம் கார் ஓட்டுநர் பாதுகாவலர் ஐபிஎஸ் ஐஏஎஸ் அதிகாரிகள் என போயஸ் கார்டனில் இருந்த பலரும் எங்கே சென்றார்கள் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அவரது மர்ம மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மௌனமாகவிருந்த பன்னீர்செல்வம் பின்பு எடப்பாடி பழனிச்சாமி அரசில் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்ட பின்பு மவுனத்தைக் கலைத்தது ஏன் என்றும் ஜெயலலிதாவின் மர்ம மரணத்தில் உண்மை நிலையை அறிய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் என்ன ஆயிற்று என்றும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர் பொன்முடி காரை மறித்து விழுப்புரம் மாவட்டத்திலிருந்து வெளியேற்ற சொன்ன கிராம மக்கள்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணத்தில் தொடர்ந்து உரிய விசாரணை செய்யப்பட்டு அதன் உண்மை நிலையை வெளிச்சத்திற்குக் கொண்டுவரத் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த போஸ்டரில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. உளுந்தூர்பேட்டை நகரத்தின் பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி