ஆப்நகரம்

கன்னிகாபரமேஸ்வரி ஜவுளிக்கடையில் ரூ ஒன்றரை லட்சம் கொள்ளை: இது விழுப்புரம் கிளை!

விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் பிரபலமான துணிக்கடையின் மேல் கூரையை துளையிட்டு மர்ம நபர்கள் ஒருலட்சத்து 50 ஆயிரத்தை கொள்ளை அடித்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்துள்ளது.

Samayam Tamil 3 Sep 2021, 7:11 pm
விழுப்புரம் நகர பகுதியான காமராஜர் வீதியில் பிரபலமான கன்னிகா பரமேஸ்வரி துணிக்கடை இயங்கி வருகிறது. இரவு கடையை பூட்டு விட்டு அதிகாலை இன்று ஊழியர்கள் கடையை திறந்துள்ளனர்.
Samayam Tamil கன்னிகாபரமேஸ்வரி ஜவுளிக்கடையில் ரூ ஒன்றரை லட்சம் கொள்ளை: இது விழுப்புரம் கிளை!


அப்போது கடையின் உள்ளே இருந்த பில்லிங் கவுண்டரில் கல்லா பெட்டி உடைக்கப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொள்ளை சம்பவம் தொடர்பாக துணி கடையின் மேலாளருக்கு ஊழியர்கள் தெரிவித்துவிட்டு நகர காவல் நிலைய போலீசார் புகார் அளித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

தோட்டத்தில் தோண்டி எடுக்கப்பட்ட கள்ளச்சாராய கேன்கள்... அண்ணன், தம்பி தலைமறைவு!
விசாரணையில் கடையின் மாடியினுள் உள்ள ஷட்டரின் பூட்டை உடைத்து மாடிவழியாக உள்ளே துளையிட்டு வந்து கல்லா பெட்டியினுள் இருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரத்தைகொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து கைரேகை நிபுணர்கள் மோப்ப நாய் வரவழைத்து தடயங்களை சேகரித்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் கடையில் கொள்ளை அடித்த கொள்ளையர்கள் கடையினுள் இருந்த சி சி டி வி காட்சி பதிவுகளையும் எடுத்து சென்றுள்ளனர். விழுப்புரம் நகர பகுதியிலுள்ள பிரபலமான துணி கடையில் மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி