ஆப்நகரம்

"GoBackModi என்று கூற திமுகவுக்கு தைரியம் இல்லை"- ஏ.ஜி.சம்பத் அதிரடி!

பிரதமர் நரேந்திர மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க தமிழக அரசு தயாராக உள்ளதாகவும், கோ பேக் மோடி என்று சொல்ல யாருக்கும் தைரியம் இல்லை எனவும் தமிழக பாஜக துணைத் தலைவர் சம்பத் கூறியுள்ளார்.

Samayam Tamil 25 May 2022, 3:05 pm
விழுப்புரம் மாவட்ட பாஜக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் மாநில துணைத் தலைவர் ஏ.ஜி.சம்பத் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:-

"பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக மே 26-ம் தேதி சென்னை வருகிறார். அன்றைய தினம் திமுகவினரால் கோ பேக் மோடி என்று சொல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். எதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும், எதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடாதென்று என்பது கூட ஆளும் தமிழக அரசுக்கு தெரியவில்லை என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து பேசிய அவர் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்படி 72 மணி நேரத்திற்குள் குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

திமுக தேர்தல் வாக்குறுதியில் மாதந்தோறும் குடும்ப அட்டை தாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், கேஸ் மானியம் வழங்கப்படும், நீட்தேர்வு ரத்து செய்யபடும் என கூறியதை நிறைவேற்றாமல் செயல்படுவதாக குற்றம்சாட்டிய அவர், தமிழக அரசு டாஸ்மாக் வருவாயை நம்பி மட்டுமே இருப்பதாகவும், பிரதமர் மோடியை சிவப்பு கம்பளம் கொடுத்து வரவேற்க தமிழக அரசு தயாராக உள்ளதாகவும், கோ பேக் மோடி(#GoBackmodi) என்று சொல்ல யாருக்கும் தைரியம் இல்லை" எனவும் அவர் கூறினார்.

அடுத்த செய்தி