ஆப்நகரம்

தைப்பூசம்: காண கண்கோடி வேண்டும் ராஜ அலங்காரத்தில் முருகன்!

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு விக்கிரவாண்டி அருகே உள்ள பாலதண்டயுதபாணி சுவாமி கோயிலில் மூலவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Samayam Tamil 18 Jan 2022, 9:58 am
முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக விளங்கும் தைப்பூச நாளான இன்று மாநிலம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் கொண்டாடப்படுகிறது. அதன்படி, அறுபடை வீடுகளில் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக விரதமிருந்த பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து பழனி, திருத்தணி, திருச்செந்தூர் உள்ளிட்ட முருகன் கோயில்களுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
Samayam Tamil thaipusam 2022


தமிழகத்தில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று அதிகரித்து உள்ளதால் சில கோயில்களில் பக்தர்கள் கூட்டமின்றி மிகவும் எளிமையாக தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வட குச்சிப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள, ஸ்ரீ ஞான தண்டாயுதபாணி சுவாமி, பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் ஆலயத்தில் எட்டாம் ஆண்டு தைப்பூச பெருவிழா நாளை நடைபெற உள்ளது.
ஆற்றுத் திருவிழாவுக்கு திடீர் தடை... ஆட்சியர் உத்தரவால் பொதுமக்கள் அதிர்ச்சி!

தைப்பூச திருவிழாவையொடி மூலவர் முருகப்பெருமான் சந்தனகாப்பு ராஜ அலங்காரத்தில் எழுந்தருளினார். காலையில் காவடி எடுப்பது, அலகு குத்துதல் தேர் வீதி உலா மற்றும் மகா தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. இதில், கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

அடுத்த செய்தி