ஆப்நகரம்

பெண்ணிடம் போன் நம்பர் கொடுத்த கலெக்டர்; ஆடிப் போய் கிடக்கும் அரசுத்துறை அதிகாரிகள்!

பெண்களிடம் செல்போன் எண் கொடுத்து கலெக்டர் பேச சொன்னார். இதை பார்த்து அரசுத்துறை அதிகாரிகள் ஆடிப்போயினர்.

Samayam Tamil 8 Nov 2021, 7:41 pm
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது.
Samayam Tamil பழங்குடி மக்களிடம் குறைகள் கேட்கும் கலெக்டர்
பழங்குடி மக்களிடம் குறைகள் கேட்கும் கலெக்டர்


இதன் தொடர்ச்சியாக, வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுபகுதி நாளை உருவாகிறது என்பதால் கடலூர்- விழுப்புரம் உள்பட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மாலையில் இருந்து மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல மழையின் வேகம் அதிகரித்து, இரவு 10.30 மணி அளவில் பலத்த மழை கொட்டியது.

இரவு முழுவதும் மழை விட்டு விட்டு பெய்தபடி இருந்தது. கனமழையின் காரணமாக, விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் பெரும்பாலான பஸ்கள் உள்ளே நிலையத்துக்குள் செல்லாமல் வெளியே சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி சென்றது.


இதனால் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்லும் பஸ் எங்கு நிற்கிறது? என்று தெரியாமல் கொட்டும் மழையில் நனைந்தபடி அங்குமிங்கும் ஓடிச்சென்று பஸ்களில் ஏறி பயனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

களம் இறங்கிய பாஜக பறக்கும் படை; மழை நிவாரண உதவி எண் அறிவிப்பு!

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மோகன் திடீரென இருளர் பழங்குடியினர் வசிக்கும் மயிலம் பகுதியில் நுழைந்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மயிலம் பகுதி மட்டும் அல்லாமல், அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் அனைத்து இருளர் மற்றும் நரிக்குறவர்களுக்கு பட்டா வழங்க கலெக்டர் உத்தரவிட்டார்.

மழையுடன் விளையாடிய மாநகராட்சி?; மரண வாசல் தொட்டு திரும்பிய மக்கள்!

இதைத் தொடர்ந்து 67 குடும்பங்களுக்கு பட்டா வழங்குவதோடு, அவர்களுக்கு உடனடியாக ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ்கள் மற்றும் வங்கி கணக்கு போன்றவற்றை வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், அங்கிருந்த இருளர் பெண்களிடம் தன்னுடைய செல்போன் எண்ணை வழங்கி உதவி அல்லது புகார் ஏதாவது தெரிவிக்க விரும்பினால் தன்னை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டார். இதை பார்த்து அதிகாரிகள் ஆடிப்போயினர்.

அடுத்த செய்தி