ஆப்நகரம்

இந்தி படிப்பதில் தவறில்லை அதை கட்டாயப்படுத்த கூடாது-அமைச்சர் பொன்முடி

இந்தி படித்தவர்கள் எல்லாம் தமிழகத்திற்கு வந்து பணி செய்வதாகவும் இந்தி படிப்பதில்லை தவறில்லை அதை கட்டாயப்படுத்த கூடாது என்பதை தான் நாங்கள் கூறிவருவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Edited byசு. கணபதி சுப்பிரமணியன் | Samayam Tamil 11 May 2023, 9:04 am

ஹைலைட்ஸ்:

  • இந்தி படிப்பதில் தவறில்லை அதை கட்டாயப்படுத்த கூடாது
  • இந்தி படித்தவர்கள் எல்லாம் தமிழகத்திற்கு வந்து பணி செய்கின்றனர்
  • அமைச்சர் பொன்முடி பேச்சு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil villupuram
Villupuram
மாநில சிறுபாண்மையினர் ஆணையம் சார்பில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கல்லூரிகளுக்கான பேச்சுப்போட்டிகள் விக்கிரவாண்டியிலுள்ள பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
20 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய அதிகாரி...கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்
பேச்சுப்போட்டி
கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான பேச்சுப்போட்டியினை அமைச்சர்கள் பொன்முடி செஞ்சி மஸ்தான் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் 70 கல்லூரிகளை சார்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே , பெரியாரும் அம்பேத்கர் கண்ட சமூக ஜனநாயகம், திராவிடம் சொல்லும் பண்பாட்டு நெறி ஆகிய தலைப்புகளில் பேச்சு போட்டி நடைபெற்றது.
மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை
இதில் மாணவர்கள் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தினர். பேச்சு போட்டியை தொடங்கி வைத்த பின் மேடையில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-
படிக்கும் போதே மாணவர்கள் வரலாற்றை பற்றியும், மொழியை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். புத்தகத்தில் இருப்பதை மனப்பாடம் செய்து தேர்வு எழுதுவது மட்டும் கல்வியறிவு அல்ல.
மகளிர் படிக்கவே கூடாது என்ற காலம் இருந்த நிலையில் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும், 50 சதவிகிதம் உள்ளாட்சியில் இடஒதுக்கீடு வழங்கியவர் தான் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.

திமுக ஆட்சி
ஒரு காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலைமை இருந்ததை மாற்றியமைத்தது தான் திமுக ஆட்சி. அந்த சமூகத்தின் மீது எங்களுக்கு தனிப்பட்ட வெறுப்பு இல்லை. இந்தி படித்தவர்கள் எல்லாம் தமிழகத்தில் வந்து வேலை பார்க்கிறார்கள்.

இந்தி படிப்பதில் தவறில்லை
இந்தி படிப்பதில் தவறில்லை அதை கட்டாயப்படுத்த கூடாது என்பதை தான் நாங்கள் கூறி வருகிறோம். இரு மொழிக்கொள்கையே தமிழகத்திற்கு போதுமானது என்பதை முதல்வர் ஸ்டாலினும் வலியுறுத்தியுள்ளார். தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து புதியதாக 31 அரசு கலைக்கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி கூறினார்.

பேச்சு போட்டிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில்,
சூடான் தமிழர்கள்
சூடானில் சிலர் இருக்கும் தமிழர்கள் சிலர் தங்களுக்கு பிரச்சனை இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஏற்கனவே திரும்பியவர்கள் தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதுவரை 270 பேர் தமிழகம் திரும்பி உள்ளனர். உக்ரைன் நாட்டில் இருக்கும் தமிழர்கள் தங்களுக்கு பிரச்சனை எதுவும் இல்லை என்றும் அப்படி பிரச்சனை என்றால் கண்டிப்பாக உதவி கேட்போம் என்று கூறியுள்ளனர்.
கோவையில் காற்றுடன் கூடிய கனமழை- மின் தடையால் பொதுமக்கள் அவதி
தமிழிசை
மேலும் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து திரும்பியவர்களுக்கு தமிழகத்தில் மருத்துவம் பயில ஒன்றிய அரசுக்கு கோப்புகள் அனுப்பியுள்ளதால் ஒன்றிய அரசின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். திராவிட மாடல் என்பது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான். தமிழிசைக்கு பெயர் இருப்பது திராவிட மாடல் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
எழுத்தாளர் பற்றி
சு. கணபதி சுப்பிரமணியன்
நான் கணபதி சுப்பிரமணியன். ஊடகத்துறையில் 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். தேசிய, சர்வதேச, சினிமா செய்திகள் எழுதிய அனுபவம் உள்ளது. இப்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி