ஆப்நகரம்

பாஜகவோடு கூட்டணி வைப்பவர் சொந்த சாதிக்கே எதிரி: திருமாவளவன்!

பாஜகவோடு கூட்டணி வைப்பவர்கள் சமூக நீதிக்கும், சொந்த சாதிக்கும் எதிரானவர்கள் என விழுப்புரத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.

Samayam Tamil 21 Jan 2021, 11:27 am
பெரியார் பன்னாட்டு அமைப்பு (அமெரிக்கா) சமூக நீதிக்கான கி. வீரமணி விருது பெற்ற விசிக தலைவர் திருமாவளவனுக்கு விழுப்புரம் சமூக உணர்வாளர்கள் சார்பில் பாராட்டு விழா விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று வழங்கப்பட்டது.
Samayam Tamil பாஜகவோடு கூட்டணி வைப்பவர் சொந்த சாதிக்கே எதிரி: திருமாவளவன்!
பாஜகவோடு கூட்டணி வைப்பவர் சொந்த சாதிக்கே எதிரி: திருமாவளவன்!


விழாவில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகள் திருமாவளவனைப் பாராட்டிப் பேசினர். இவ்விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் ஏற்புரை ஆற்றிப் பேசுகையில், “சமூக நீதிக்குச் சனாதன கும்பலால் பேராபத்து இருக்கிறது. இதனை பாதுகாக்க வேண்டும். இந்த ஆபத்தை உணராமல் உள்ளோம். இதைத் தடுக்கவில்லை என்றால் சமூக நீதியைச் சீர்குலைத்துவிடுவார்கள்.

இதை குறிவைத்துத்தான் மோடி அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் திமுக, அதிமுக என்ற திராவிட கட்சிகளை அழிப்பது பாஜக நோக்கமல்ல. அப்படிக் கருதக்கூடாது. பெரியார் என்ற அடையாளத்தை அழிக்கத் துடிக்கிறார்கள்.

சமூக நீதியை அழிக்க வேண்டும் என்றால் பெரியார் என்ற அடையாளத்தை அழிக்க வேண்டும் என பாஜக, ஆர்எஸ்எஸ் துடித்து வருகிறது. பாஜகவோடு யார் கூட்டணி வைத்தாலும், அவர்கள் சமூக நீதிக்கு எதிரானவர்கள் மற்றும் சொந்த சாதிக்கு எதிரானவர்கள்.

திமுக-விடுதலை சிறுத்தைகள் சண்டை எதனால் என திருமா விளக்கம்!

தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாகத் தாமரை மலரும் என்று சொல்லி வருகிறார்கள். தாமரை சேற்றில் மட்டும் மலரும். அரசியலில் மலராது என்றார். அதிமுகவை அழிக்கும் வேலைகளை பாஜக செய்கிறது. இது முதல்வர் பழனிசாமிக்குத் தெரியுமோ என்று தெரியவில்லை” என்றார்.

அடுத்த செய்தி