ஆப்நகரம்

ஊனமாக்கிய அரசு பேருந்து: பயணிகளை இறக்கிவிட்டு கோர்ட் அதிரடி ஜப்தி!

விழுப்புரம் திண்டிவனத்தில் விபத்து இழப்பீடு வழங்காத இரு அரசு பேருந்துகளை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள். நடுவழியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Samayam Tamil 26 Aug 2021, 7:56 am
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள ஆட்சிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன். வயது 29. இவர் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் திண்டிவனம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னையிலிருந்து திருச்சி மார்க்கமாகச் சென்ற அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கிருஷ்ணனுக்குக் கால் முறிவு ஏற்பட்டது.
Samayam Tamil ஊனமாக்கிய அரசு பேருந்து: பயணிகளை இறக்கிவிட்டு கோர்ட் அதிரடி ஜப்தி!


இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட ஜெயகிருஷ்ணனுக்கு 19 லட்சத்து 35 ஆயிரத்து 200 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டிருந்தது. ஆனால் தற்போது வரை இழப்பீடு வழங்கப்படவில்லை.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். இந்த ஜப்தி நடவடிக்கை காரணமாகப் பயணிகள் பாதியி வழியிலே இறக்கிவிடப்பட்டு அவதிக்குள்ளாகப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஸ்ரீதர் கல்வராயன் மலைக்குச் சென்று அதிரடி: அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு!
இதேபோல் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவர் மீது சென்னை பகுதியிலிருந்து கும்பகோணம் செல்லும் அரசுப் பேருந்து 2011 டிசம்பர் 23ஆம் தேதி மோதி விபத்து ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 37 லட்சத்து 40 ஆயிரத்து 85 ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இழப்பீடு வழங்கப்படாத நிலையில் குறிப்பிட்ட பேருந்தையும் நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். இந்த பேருந்தையும் ஊழியர்கள் பயணிகளை இறக்கிவிட்டு ஜப்தி செய்தனர். ஜப்தி செய்யப்பட்ட 2 பேருந்துகளும் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அடுத்த செய்தி