ஆப்நகரம்

நமது குடும்ப வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் - அமைச்சர் பொன்முடி கூறியது என்ன?

பள்ளி மாணவர்கள் வரலாற்று புத்தகங்களை படிக்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி அறிவுரை வழங்கினார்.

Samayam Tamil 4 Apr 2022, 6:20 am
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் 75-வது சுதந்திர தின மற்றும் பல்துறை பணிவிளக்க கண்காட்சியை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர். அப்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, சிவக்குமார், லட்சுமணன் ஆகியோர் உடன் இருந்தனர். நிகழ்ச்சியில் மாற்று திறனாளி மாணவர்களுக்கு அமைச்சர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
Samayam Tamil minister ponmudi
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி


விழா மேடையில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-

தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாடுபட்டு வருகிறார். நாம் முதலில் வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டும். அப்போது, தான் எதிர்காலம் எப்படி இருக்கும் என தெரிந்துகொள்ள முடியும். குறிப்பாக மாணவர்கள் வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்தியாவின் வரலாறு தென்பகுதியில் இருந்து தான் துவங்கியது என ஐரோப்பியா நாட்டை சேர்ந்த வரலாற்று பேராசிரியர் எழுதி வைத்துள்ளார். சிலருக்கு வரலாறே தெரியவில்லை. தமிழகத்தில் சுதந்திரத்திற்காக போராடிய வீரர்கள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால் வரலாறுகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
7 மாவட்ட ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்!

மேலும், ராமன் ஆண்டா என்ன?, இராவணன் ஆண்டா என்ன? என்று ஒரு காலம் இருந்தது, அதெல்லாம் இப்போது செல்லாது. நமது நாட்டை நாம் தான் ஆள வேண்டும் என்பதற்காக தான் ’நான் முதல்வன்’ என்ற திட்டத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார். எந்த துறையில் இருந்தாலும், நாம் முதல்வராக இருக்க வேண்டும் என்ற உணர்வு எல்லோருக்கும் இருக்க வேண்டும்.

விழுப்புரம் மாவட்டம் கொழுவாரியில் பெரியார் சமத்துவபுரம் திட்டத்தை கருணாநிதி துவங்கினார். ஆனால், 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்படாமல் இருந்தது. தற்போது அதற்கான பணி முடிவடைந்து ஏப்ரல் 5-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். திண்டிவனத்தில் ஒரு தொழிற்சாலைக்கு அடிக்கல் மற்றும் 10000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். என்று கூறினார்.

அடுத்த செய்தி