ஆப்நகரம்

கட்டுக் கட்டாக ரூ.40 லட்சம் லஞ்சம்... திருச்சி துணை ஆட்சியர் கைது!

திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையில் துணை ஆட்சியராக பணிபுரியும் சரவணக்குமார் ரூ.40 லஞ்சப் பணத்துடன் சென்னை சென்றபோது விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டார்.

Samayam Tamil 30 Mar 2022, 5:05 pm
திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையில் துணை ஆட்சியராக பணிபுரியும் சரவணக்குமார் என்பவர் லஞ்சமாக பெற்ற 40 லட்சம் ரூபாய் ரொக்கத்துடன் காரில் சென்னை செல்வதாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
Samayam Tamil adi dravidar welfare department


தகவலின் பேரில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விழுப்புரம் சோதனைச் சாவடியில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சொகுசு கார் ஒன்றில் துணை ஆட்சியர் சரவணக்குமார் மற்றும் அவரது உதவியாளர் மணி ஆகியோர் பெரிய சூட்கேஸ் ஒன்றுடன் பயணம் செய்ததை உறுதி செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் சூட்கேஸை பிரித்து பார்த்த போது கட்டுக்கட்டாக பணம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பணம் மற்றும் காரை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையில் வைத்து சரவணக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீட் ரத்து: ஸ்டாலின்-ஆர்.என்.ரவி சந்திப்பு... தமிழிசை பதிலடி!

இந்த பணம் யாரிடமிருந்து எதற்காக பெறப்பட்டது என்பது குறித்த தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. தீவிர விசாரணைக்கு பின்னரே முழு விபரம் வெளியிடப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி