விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ஆவுடையார்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமரன். இவரது மனைவி பெயர் சரளா. இந்த தம்பதிக்கு சுதா என்று 17 வயது மகள் இருந்தார். அவர் திருக்கனூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்தார். தற்போது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுவதால் அவர் அந்தத் தேர்வுக்கு ஆயத்தமாகி எழுதி வந்துள்ளார்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
ஆனால் அவர் ஒழுங்காக படிப்பில் கவனம் செலுத்தாமல் செல்போனை பார்த்து கொண்டே நேரத்தை கழித்ததாக கூறப்படுகிறது. அதனால் பள்ளி மாணவி சுதாவை அவரது பெற்றோர்கள் ஒழுங்காக செல்போனை வைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தி கண்டித்துள்ளனர்.
பலமுறை அந்த மாணவியை பெற்றோர்கள் கண்டித்தும் அதனை சுதா கேட்பதாக இல்லை. தொடர்ந்து அவர் செல்போனை பயன்படுத்திக் கொண்டே ஒழுங்காக படிக்காமல் இருந்து வந்துள்ளார்.
அதனால் நேற்றைய தினம் மாணவி செல்போனை பயன்படுத்தியதை கண்ட பெற்றோர்கள் அதனை வாங்கி வைத்துள்ளனர். அதனை திருப்பித் தரும்படி கேட்டு அந்த மாணவி அடம் பிடித்துள்ளார்.
இருப்பினும் அவரது பெற்றோர் செல்போனை தராததால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவி வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரவாண்டி காவல் துறையினர் அந்த பள்ளி மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி மாணவர்களின் வாழ்க்கையில் முக்கியமான தேர்வு 12ஆம் வகுப்பு பொது தேர்வு என்பதால் மாணவர்களை பெற்றோர்கள் சற்று கண்டிப்புடன் நடத்தி படிக்க வலியுறுத்தி வருகின்றனர். அதைப்போலவே சுதாவின் பெற்றோர்களும் செல்போனை பயன்படுத்தாமல் மாணவியை படிக்கச் சொன்னதால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
ஆனால் அவர் ஒழுங்காக படிப்பில் கவனம் செலுத்தாமல் செல்போனை பார்த்து கொண்டே நேரத்தை கழித்ததாக கூறப்படுகிறது. அதனால் பள்ளி மாணவி சுதாவை அவரது பெற்றோர்கள் ஒழுங்காக செல்போனை வைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தி கண்டித்துள்ளனர்.
பலமுறை அந்த மாணவியை பெற்றோர்கள் கண்டித்தும் அதனை சுதா கேட்பதாக இல்லை. தொடர்ந்து அவர் செல்போனை பயன்படுத்திக் கொண்டே ஒழுங்காக படிக்காமல் இருந்து வந்துள்ளார்.
அதனால் நேற்றைய தினம் மாணவி செல்போனை பயன்படுத்தியதை கண்ட பெற்றோர்கள் அதனை வாங்கி வைத்துள்ளனர். அதனை திருப்பித் தரும்படி கேட்டு அந்த மாணவி அடம் பிடித்துள்ளார்.
இருப்பினும் அவரது பெற்றோர் செல்போனை தராததால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவி வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரவாண்டி காவல் துறையினர் அந்த பள்ளி மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி மாணவர்களின் வாழ்க்கையில் முக்கியமான தேர்வு 12ஆம் வகுப்பு பொது தேர்வு என்பதால் மாணவர்களை பெற்றோர்கள் சற்று கண்டிப்புடன் நடத்தி படிக்க வலியுறுத்தி வருகின்றனர். அதைப்போலவே சுதாவின் பெற்றோர்களும் செல்போனை பயன்படுத்தாமல் மாணவியை படிக்கச் சொன்னதால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.