ஆப்நகரம்

விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தொடர்மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 28 Nov 2021, 11:10 pm

ஹைலைட்ஸ்:

  • விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்மழை
  • பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil villupuram school holidays
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெரும்பாலான மாவட்டங்களில் பேய் மழை கொட்டி வருகிறது. தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
தொடர்மழையால் பொது மக்களின் இயல்வு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில், வரும் 29 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாமதமாக, வரும் 30 ஆம் தேதி உருவாகலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், செஞ்சி, மரக்காணம், விக்கிரவாண்டி, வானூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நாளை (நவம்பர் 29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் மோகன் அறிவித்துள்ளார்.

அடுத்த செய்தி