ஆப்நகரம்

தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு… எல்லீஸ் அணை உடையும் அபாயம்!

விழுப்புரம் அருகே ஏனாதி மங்கலத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள எல்லீஸ் அணைக்கட்டில் கசிவு ஏற்பட்டு நீர் வெளியேறி வருகிறது.

Samayam Tamil 27 Oct 2021, 11:02 pm
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பிடாகம் வழியாக தென்பெண்ணை ஆறு கடலூர் மாவட்டம் சென்றடைகிறது. இதன் குறுக்கே விழுப்புரம் அருகே ஏனாதிமங்கலம் என்கிற இடத்தில் எல்லீஸ் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டு மூலமாக 1,446 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
Samayam Tamil villupuram news
உடையும் நிலையில் உள்ள எல்லீஸ் அணைக்கட்டு


அணைக்கட்டு வாய்க்கால் வழியாக அருகில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலம் அருகே உள்ள எல்லீஸ் அணைக்கட்டு பகுதியில் தண்ணீர் தேக்கி வைக்கும் இடத்தில் உடைப்பு ஏற்பட்டு நீர் கசிந்து வருகிறது. இதனால் அணைக்கட்டு பவீனமடைந்து உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகமா லஞ்சம் வாங்குறாங்க… வட்டாட்சியர் அலுவகத்தில் புகுந்து தாசில்தார் காருக்கு தீ வைத்த இளைஞர்!

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. உடனடியாக அணையை சீரமைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ள போதிலும், நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணை உடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொறியியல் வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி