ஆப்நகரம்

விழுப்புரம் எம்.எல்.ஏ லட்சுமணனுக்கு கொரோனா...!

விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணனுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனையில் பாசிட்டிவ் என்று வந்ததன் காரணமாக வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டார்.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 18 May 2022, 7:05 pm

ஹைலைட்ஸ்:

  • விழுப்புரத்தில் நேற்று கொரோனா சிகிச்சையில் இருவர்
  • எம்எல்ஏ லட்சுமணனுக்கு கொரோனா அறிகுறிகள்
  • பரிசோதனையில் பாசிட்டிவ் வந்ததால் வீட்டில் தனிமை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர்
விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர்
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கொரோனா தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வந்துகொண்டு இருக்கிறது. கொரோனவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பலகட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நாடுகள் முடங்கி போய் கிடந்தன. கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை மற்றும் மூன்றாவது அலை என இதன் பாதிப்பு தொடர்ந்து வந்தது.
கல்வி நிலையங்கள் மூடப்பட்டு, ஆன்லைன் வகுப்புகளில் படம் நடத்தப்பட்டு வந்ததால் மாணவர்களின் கல்வியிலும் பாதிப்புகள் ஏற்பட்டது. இதை சரிசெய்யும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

ஸ்டாலின் புகழ்பாடிய பாமக எம்.எல்.ஏ... வாயை பிளந்த உடன்பிறப்புகள்!

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்புகளும், இறப்புகளும் குறைந்து வந்தது. சென்னை, கோவை போன்ற அதிக பாதிப்புகளை சந்தித்து வந்த பகுதிகளில் கூட இறப்பு இல்லாமல் இருந்தது. அரசும் தங்களது கட்டுப்பாடுகளை தளர்த்தி வந்தது. இதனால் பொதுமக்கள் பெரு மூச்சு விட்டனர்.

சில நாட்கள் கழித்து, சற்றே எட்டிப்பார்த்த கொரோனாவால் , பொது இடங்களில் தனிமனித இடைவெளி கடைபிடிப்பது மற்றும் முகக்கவசம் அணிவது போன்றவை கட்டாயம் என சுகாதாரத்துறை வலியுறுத்தியது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

நேற்றைய நிலவரப்படி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள், உள்நாட்டு வெளிநாட்டு விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் செய்யப்பட்ட சோதனையில் 324 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரத்தை பொறுத்தவரை ஏற்கனவே சிகிச்சையில் இருக்கும் நபர் ஒருவர், புதிதாக நேற்று அனுமதிக்கப்பட்டவர் ஒருவர் என மொத்தம் 2 கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இருந்தது. உயிரிழப்புகள் எதுவும் இல்லை.

கொரோனா காலகட்டத்தில் மக்கள் பணி ஆற்றும் சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் அரசியல் புள்ளிகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருந்தது. அந்தவகையில் திமுகவை சேர்ந்த விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி