ஆப்நகரம்

படிப்பகமாக மாறிய பாழடைந்த கட்டிடம்... தலைமை ஆசிரியையான முன்னாள் மாணவி சாதனை

விழுப்புரத்தில் பாழைந்த கட்டிடத்தை படிப்பகமாக மாற்றியிருக்கிறார் முன்னாள் மாணவியும் இந்நாள் தலைமை ஆசிரியையுமான திருமதி சசிகலா அவர்கள்.

Samayam Tamil 24 Feb 2021, 10:42 am
விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேநிலைப்பள்ளியில் இருந்த 100 ஆண்டுகள் பழைய கட்டிடம் தற்போது நூலகமாக மாற்றப்பட்டுள்ளது. அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவியும் இந்நாள் தலைமை ஆசிரியையுமான சசிகலா கலைவாணன் தான் இதைச் சாத்தியமாக்கியிருக்கிறார். இவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Samayam Tamil vilupuram school library


இதுகுறித்து தொல்லியல் வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளருமான விருப்புரம் கோ.செங்குட்டுவன் பதிவிட்டதாவது”

“ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தளவாடச் சாமான்கள் குவித்து வைக்கப்பட்ட “குடோனா”க இருந்த இந்த அறை, இப்போது பளபளக்கிறது.

இனி ஒன்றுக்கும் உதவாது எனக் கைவிடப்பட்ட மேசைகள் உள்ளிட்டவையும் புத்துயிர் பெற்றுள்ளன.
இன்னும் சில நாள்களில் இந்த இடம் வாசிப்பவர்களால் நிரம்பி வழியும். ஆமாம். விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேனிலைப் பள்ளி வளாகத்தில் இருக்கும் நூற்றாண்டைக் கடந்த கட்டிடத்தில் தான் இந்தத் தலைகீழ் மாற்றங்கள்.

விழுப்புரம் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... ஜெயலலிதா பெயரில் வருகிறது பல்கலைக்கழகம்!

இந்தக் கட்டிடத்தின் முகப்பு அறை இப்போது நூலகமாக உருமாற்றம் அடைந்துள்ளது. எப்படியும் 10,000 புத்தகங்களாவது இங்கு இடம்பெறலாம். ஒரே நேரத்தில் 80 பேர் அமர்ந்து வாசிக்கலாம்.
கடந்த சில மாதங்களாகவே இதற்கானப் பணிகள் துரித கதியில் நடந்து வந்தன. இப்போது நிறைவடையும் தருவாயில் இருக்கின்றன.

பழமைவாய்ந்த இந்தக் கட்டடத்தை இப்படியும் பயன்படுத்தலாம் என யோசித்து யோசித்து, அதை நடைமுறை சாத்தியம் ஆக்கி இருக்கிறார், இப்பள்ளியின் முன்னாள் மாணவியும் இந்நாள் தலைமை ஆசிரியருமான சசிகலா அவர்கள்.”

பட்டியலை விட்டு வந்தாலும் இட ஒதுக்கீடு கேட்போம்: ஜான் பாண்டியன் பேட்டி

மேலும் இது குறித்துக் கேட்டபோது “இது என் தனிப்பட்ட முயற்சி அல்ல: சக ஆசிரியர்கள், துறைசார்ந்தோர், அப்புறம், பள்ளி வளர்ச்சியில் அக்கறை கொண்ட பொதுநல அமைப்பினர் உள்ளிட்டோரின் கூட்டு முயற்சி” என்று சொல்லியிருக்கிறார், தலைமை ஆசிரியர் சசிகலா.

இந்த நூலகம், மாணவிகளுக்கு புதிய வாசிப்பு அனுபவத்தைத் தரும். குறிப்பாகப் போட்டித் தேர்வுகளுக்கு அவர்களைத் தயார்படுத்தும் வகையில் இருக்கும். இப்பள்ளி மாணவிகள் மட்டும் அல்ல, வெளியில் இருந்து வரக்கூடிய மாணவியரும் இந்நூலகத்தைப் பயன்படுத்தலாம்.

அடுத்த செய்தி