ஆப்நகரம்

VK Sasikala: வண்டியை திருப்பும் சசிகலா... அதிமுகவில் அடுத்த பெரிய ட்விஸ்ட்!

தொண்டர்கள் படையுடன் விரைவில் அதிமுகவின் பொதுச் செயலாளராக வருவேன் என்று சசிகலா கூறிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Samayam Tamil 6 Jul 2022, 12:23 pm
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வி.கே.சசிகலா தொண்டர்களை சந்தித்தார். திண்டிவனத்தில் தொடங்கிய பயணம் மரக்காணத்தில் நிறைவு பெற்றது. அங்கு தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா, ஒரு சிலரின் சுயநலத்தால் அதிமுகவின் வெற்றி சின்னமான இரட்டை இலையில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது மிகவும் வேதனையான தருணம்.
Samayam Tamil will go to aiadmk royapettah head office with cadres soon says vk sasikala
VK Sasikala: வண்டியை திருப்பும் சசிகலா... அதிமுகவில் அடுத்த பெரிய ட்விஸ்ட்!


அதிகாரம் கிடையாது

அவரவர் உயர் பதவிகளுக்கு வருவதற்கு சூழ்ச்சிகள் செய்து அடிமட்ட தொண்டர்கள் மேலே வராமல் முட்டுக்கட்டை போடுவது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பினார். புரட்சி தலைவரும், புரட்சி தலைவியும் உங்களை மன்னிப்பார்களா? ஆண்டிற்கு ஒருமுறை அவரவர் விருப்பப்படி, கட்சியின் சட்ட திட்டங்களை மாற்ற யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை.

யாருமே விரும்பவில்லை

அதுவும் புரட்சி தலைவர் உருவாக்கிய சட்ட திட்டங்களை திருத்தம் செய்ய எந்த தொண்டர்களும் மனப்பூர்வமாக விரும்பவில்லை. இதை புரிந்து கொண்டு செயல்பட்டால் தான், அவர்களுக்கு நாம் செலுத்தும் மிகப்பெரிய நன்றிக் கடனாக இருக்கும் என்றார். மேலும் பேசுகையில், நமது இயக்கத்தை பார்த்து திமுகவினர் பொறாமைப்பட்ட காலங்கள் உண்டு. ஆனால் தற்போது ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.


Villupuram to Tirupati train: திருப்பதி செல்வோருக்கு நல்ல செய்தி... மக்கள் மகிழ்ச்சி!

திமுக எண்ணம் பலிக்காது

ஒன்றை மட்டும் கூறிக் கொள்கிறேன். திமுகவின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. இந்த இயக்கம் நூறாண்டுகள் ஆனாலும் மக்களுக்காகவே இயங்கும் என்று குறிப்பிட்டார். மரக்காணம் பகுதி மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசிய சசிகலா, எக்கியார்குப்பம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் படகுகள் நிறுத்துவதற்கு ஏதுவாக மீன்பிடித் துறைமுகம் அமைக்க வேண்டும்.

சசிகலாவின் வாக்குறுதி

புகழ்பெற்ற பூமிஸ்வரர் கோவிலை முறையாக பராமரிக்க வேண்டும். கிழக்குக் கடற்கரை சாலை பகுதிகளில் அதிக விபத்துகள் நடைபெறுவதால் மரக்காணம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். ஒருவேளை இவற்றையெல்லாம் திமுக அரசு செய்யவில்லை எனில், அடுத்து வரும் நம்முடைய ஆட்சியில் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

தொண்டர்களின் இயக்கம்

முன்னதாக திண்டிவனம் அடுத்த முருக்கேரியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, தன்னை விமர்சித்த ஜெயக்குமார் போன்றவர்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. பொதுமக்களே அவருக்கான பதிலை விரைவில் அளிப்பர். அதிமுக என்பது தனி கம்பெனியோ, தனி இயக்கமோ கிடையாது. அது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம்.


மக்களிடையே நற்பெயரை வாங்குவது கடினம்- திமுக எம்எல்ஏ லட்சுமணன் பேச்சு!

ஸ்டாலினுக்கு கேள்வி

அதிமுகவின் பொதுச் செயலாளராக விரைவில் தொண்டர்கள் படையோடு அதிமுக அலுவலகத்திற்கு செல்வேன் என்று கூறி பரபரப்பை கிளப்பினார். மேலும், கொடநாடு கொலை வழக்கு மற்றும் ஜெயலலிவிற்கு மருத்துவமனையில் நடந்த நிகழ்வுகள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் தற்போது வரை விசாரணை செய்யாமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

அடுத்த செய்தி