ஆப்நகரம்

பட்டாசு ஆலை விபத்து...சம்பவ இடத்திலேயே ஐந்து பேர் பலி

விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் அங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களில் மூன்று பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Samayam Tamil 23 Oct 2020, 3:53 pm
விருதுநகர் மாவட்ட எல்லைப் பகுதியான செங்குளம் பகுதியில் சிவகாசியை சேர்ந்த சண்முகநாதன் என்பவர்க்கு சொந்தமான ராஜேஸ்வரி என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது
Samayam Tamil பட்டாசு ஆலை
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து


இன்று காலை வழக்கமான பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது திடீரென பட்டாசு தயாரிக்கும் அறையில் வெடி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் ஆலையில் பணிபுரிந்த ஐந்து நபர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். மேலும் தீ விபத்தில் உயிரிழந்த உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டம்!

இந்த வெடி விபத்து குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. மேலும் 3 பேர் படுகாயத்துடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி