ஆப்நகரம்

பெத்த மனம் பித்து; முதியவர் எடுத்த விபரீத முடிவு!

பெற்ற பிள்ளைகள் கவனிக்க மறுத்ததால் ஆற்று வெள்ளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

Samayam Tamil 7 Dec 2021, 8:30 pm
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள தெக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம் வயது 75. இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர். நான்கு மகன்களும் திருமணமாகி அதே ஊரில் வாழ்ந்து வருகின்றனர்.
Samayam Tamil முதியவர் மீட்கப்படுகிறார்
முதியவர் மீட்கப்படுகிறார்


இந்த நிலையில் பிள்ளைகள் நான்கு பேரும் தன்னை கவனிக்க மறுத்ததால் விரக்தியடைந்த அருணாச்சலம் தற்கொலை செய்து கொள்வதாக கூறி வீட்டை விட்டு கிளம்பி சென்றார். பின்னர் செல்லம் சாத்தூர் வைப்பாற்றில் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்துள்ளார்.

ஏற்கனவே ஆற்றில் வெள்ளம் சென்று கொண்டிருப்பதால் அடித்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் முட்செடிகளில் சிக்கியுள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

பரோட்டா சாப்பிட்ட கர்ப்பிணி பலி; வயிற்றில் இருந்த 2 சிசுக்களும் சாவு!

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் விரைவாக ஆற்றில் இறங்கி கயிறு கட்டி அடியில் சிக்கியிருந்த முதியவரை பத்திரமாக உயிருடன் மீட்டு அவரை சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி