ஆப்நகரம்

சாதிய கொலை பாமக, அதிமுகவிற்கு எதிராக மாநிலத்தில் தீவிரமெடுக்கும் போராட்டம்!

அரக்கோணத்தில் கொள்கை மோதலால் செய்யப்பட்ட படுகொலை சாதி ரீதியாக நடத்தப்பட்டது அல்ல என ஆளும் கட்சிகள் கூறிவந்த நிலையில் இப்போது பாமக, அதிமுகவிற்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

Samayam Tamil 10 Apr 2021, 1:47 pm
தலித் இளைஞர்கள் படுகொலையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.
Samayam Tamil சாதிய கொலை பாமக, அதிமுகவிற்கு எதிராக மாநிலத்தில் தீவிரமெடுக்கும் போராட்டம்!


அரக்கோணம் பகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சோனூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர்கள் சூர்யா, அர்ஜுன் ஆகியோரை பாம, அதிமுகவினர் படுகொலை செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து கொலையில் முக்கிய குற்றவாளியாகக் கூறப்படும் அதிமுகவைச் சேர்ந்த பழனி என்பவரைக் கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியினர் நகரத் தலைவர் செல்வம் அவர்கள் தலைமையில் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர், திருவண்ணாமலை மேற்குத் தொடர்ச்சி மலை மணல் கடத்தல்!

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் கலைவேந்தன் மாவட்டச் செயலாளர் முருகன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பல்வேறு மாவட்டத்தில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

அடுத்த செய்தி