ஆப்நகரம்

கோவிட்-19 சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனையின் அனுமதி ரத்து!

அருப்புக்கோட்டையில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனைக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 8 Aug 2020, 1:31 pm

அருப்புக்கோட்டையில் கொரோனோ சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கு அதிக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிப்பதற்கான அனுமதியை ரத்து செய்து அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் மனோகரன் உத்தவிட்டுள்ளார்.
Samayam Tamil சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை




விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவிக் கொண்டிருந்த நிலையில், மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளை கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு அனுமதியளித்திருந்தது. இதன்படி, அருப்புக்கோட்டையில் உள்ள ‘எ சிட்டி’ தனியார் மருத்துவமனை கொரோனா நோய் தொற்று பரிசோதனை மற்றும் சிகிச்சை மையமாக செயல்பட்டு வந்தது.

இந்த மருத்துவமனையில் கோவிட்-19 பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் நேற்று அருப்புக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் தலைமையில் மருத்துவமனை அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற விசாரணையின் அறிக்கையை வட்டாட்சியர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை இணை இயக்குநர் மனோகரனிடம் சமர்ப்பித்தார்.

இந்த அறிக்கையின் முடிவை அடுத்து சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு கொரோனோ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்க வழங்கப்பட்ட அனுமதியை மட்டும் ரத்து செய்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் மனோகரன் உத்தரவிட்டுள்ளார்.

கோவிட்-19 சிகிச்சை: ரூ.12 லட்சம் வசூலித்த தனியார் மருத்துவமனைக்கு அனுமதி ரத்து!

தற்பொழுது அங்கு கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் விரும்பினால் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இனி மக்கள் யாரும் கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக அந்த தனியார் மருத்துவமனைக்கு செல்ல தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி