ஆப்நகரம்

பாஜக கொடிக் கம்பத்தை அகற்றிய அரசு அதிகாரி, வெடித்தது சர்ச்சை!

விருதுநகர் மாவட்டத்தில் பாஜகவின் கொடிக் கம்பத்தை வருவாய்த் துறை வட்டாட்சியர் அகற்றிய சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது...

Samayam Tamil 28 Sep 2020, 8:19 pm
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வைக்கப்பட்டிருந்த பாஜக கொடிக் கம்பத்தை மாவட்ட வருவாய்த் துறை வட்டாட்சியர் அகற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அரசு அதிகாரிகளின் இந்த செயலை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil பாஜக கொடிக் கம்பத்தை அகற்றிய அரசு அதிகாரி, வெடித்தது சர்ச்சை!
பாஜக கொடிக் கம்பத்தை அகற்றிய அரசு அதிகாரி, வெடித்தது சர்ச்சை!


விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உள்ள முத்துராமலிங்க சிலை அருகே பாரதிய ஜனதா கட்சியினர் தங்கள் கட்சியின் கொடியை ஏற்ற முடிவு செய்தனர். அதற்காகக் கடந்த வெள்ளிக்கிழமை, குறிப்பிட்ட பகுதியில் கொடிக் கம்பம் ஒன்றை நிறுவி, பாஜக கொடியை மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் ஏற்றிப் பறக்கவிட்டனர்.

இந்த கொடிக் கம்பத்தை அமைத்த பாஜகவினர் அரசிடம் முறையான அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதைச் சுட்டிக்காட்டி மாவட்ட வருவாய் வட்டாட்சியர் முத்துலட்சுமி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நிறுவப்பட்டிருந்த பாஜக கொடிக் கம்பத்தை மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டு அகற்றினார்.

பாஜகவில் இணைகிறாரா குஷ்பூ? எல்.முருகனை சந்தித்த சுந்தர்.சி!

மாவட்ட வருவாய்த் துறை வட்டாட்சியரின் இந்த செயல் பாஜகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொடிக் கம்பம் நிறுவப்பட்டிருந்த பகுதி விருதுநகர் மாவட்டம் ரோசல்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்டது.

வருவாய்த் துறை அதிகாரியின் செயலை கண்டித்து பாஜகவினர் ஆட்சியர் அலுவலகம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், குறிப்பிட்ட கொடிக் கம்பத்தை அதே இடத்தில் மீண்டும் அரசு நிறுவ வேண்டும் என்றும் கம்பத்தை அகற்றிய வருவாய்த் துறை வட்டாட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்தில் சுமார் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றிருந்தனர்.

அடுத்த செய்தி