ஆப்நகரம்

போலி பாஸ்: போலீசுக்கு டிமிக்கி கொடுத்த கார் டிரைவர்கள் கைது!!

போலி பாஸ் மூலம் சென்னை சென்று வந்த கார் டிரைவர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.

Samayam Tamil 5 May 2020, 12:16 am
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே வீரவநல்லூரிலிருந்து போலி அனுமதிச் சீட்டு மூலம் சென்னை சென்று வந்த இருவரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான கார் உரிமையாளர்கள் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
Samayam Tamil fake pass


வீரவநல்லூர் பள்ளிவாசல் தெரு, ஜாபர் சாதிக் (28), பாசியா சிரின் ஆகியோர் பெயரில் வாடகைக் கார் இயங்கி வருகிறது. இந்நிலையில் மே 1 அன்று வீரவநல்லூரிலிருந்து சிலரை போலி அனுமதிச் சீட்டு மூலம் இவர்கள் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். மீண்டும் சென்னையிலிருந்து வீரவநல்லூரைச் சேர்ந்த 5 பேரை அழைத்து வந்துள்ளனர்.

வேலைக்கு வந்த இடத்தில் உணவு இல்லை... நொந்து போன தொழிலாளர்கள்!!

இதுகுறித்து தகவலறிந்த வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் சாம்சன் மற்றும் போலீஸார், ஓட்டுநர்களான தெற்குமடத்துத் தெருவைச் சேர்ந்த பூமிநாதன் (38) அனந்தகிருஷ்ணாபுரம், தெற்குத் தெருவைச் சேர்ந்த ரகுராமன் (32) ஆகிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

காரைப் பறிமுதல் செய்து ஜாபர் சாதிக் மற்றும் பாசியா சிரின் ஆகியோரைத் தேடி வருகின்றனர். மேலும் சென்னையிலிருந்து வந்த 5 பேரை வருவாய்த் துறையினர் தனிமைப்படுத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி