ஆப்நகரம்

குடிநீர் தொட்டிக்குள் நாயின் சடலம்: சிவகாசி அருகே கொடூரம்!

சிவகாசி அருகே குடிநீர் தொட்டிக்குள் நாயின் சடலம் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 7 Feb 2023, 7:43 am
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேல்நிலை குடிநீர் தொட்டிக்குள் நாயின் சடலம் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil sivakasai water tank


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் கூடுதலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு அதன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

வழக்கமாக மாதத்தில் 5 மற்றும் 20ஆம் தேதிகளில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியை சுத்தம் செய்வது வழக்கம். நேற்று முன் தினம் சுத்தம் செய்யப்படாத நிலையில் நேற்று சுத்தம் செய்ய மேலே சென்றபோது உள்ளே நாயின் சடலம் கிடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலுக்குள் பேனா சிலை விவகாரம்; சீமான் பரபரப்பு பேட்டி.!
மேல்நிலை குடிநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக கடந்த 2 தினங்களாக தண்ணீர் நிரப்பப்படாமல் இருந்ததால் குடிநீர் விநியோகம் இல்லாமல் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் நாயின் சடலத்தை எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

உதயநிதிக்கு முதல்வர் டிக் அடித்த துறை: உங்கள் வீட்டு பிள்ளை - ஒர்க் அவுட் ஆகுமா?

சம்பவ இடத்தில் சிவகாசி டிஎஸ்பி தனஞ்ஜெயன் வட்டாட்சியர் லோகநாதன் உள்ளிட்டோர் ஆய்வு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இது குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி