ஆப்நகரம்

பிரதோஷ வழிபாடு... சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்!!

பிரதோஷத்தை முன்னிட்டு, பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

Samayam Tamil 15 Sep 2020, 8:33 pm
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில்.
Samayam Tamil sathuragiri


இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள், பெளர்ணமி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.பின்னர் தமிழக அரசு கடந்த 1 ஆம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கலாம் என அறிவித்திருந்தது.

வடகிழக்கிற்குத் தயார், மக்கள் இதைச் செய்ய அறிவுறுத்தல்!

இதனையடுத்து, வரும் 17 ஆம் தேதி மஹாளய அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் கோயிலுக்கு சென்று தரிசிக்க கோயில் நிர்வாகம் சார்பில் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். எந்தவொரு இடையூறு இல்லாமல் அவர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி